Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவதாரிணி பிறந்த போது நடந்த சம்பவம்.. கடைசி வரை எங்க ஆசை நடக்கல! கண் கலங்கிய கார்த்திக் ராஜா

Subscribe to Oneindia Tamil

சென்னை: இளையராஜாவின் மகளான பவதாரிணி கடந்த வருடத்தில் காலமானார். அவருடைய பிறந்த நாளில் அவருடைய முதல் திதி வந்ததால் நேற்று இசை நிகழ்ச்சி நடத்தி அஞ்சலி செலுத்தி இருந்தனர். அப்போது தன்னுடைய சகோதரி பவதாரிணி குறித்து இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா கண்கலங்க பேசியிருந்தார். அவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

சோகத்தில் இருக்கும் பலரும் மன மாற்றத்திற்காக தேடும் பாடல்களுக்கு சொந்தக்காரரான இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியும், இசையமைப்பாளருமான பவதாரிணி கடந்த வருடத்தில் உடல்நல குறைபாட்டால் காலமானார்.

Ilayaraja bhavatharini

இந்த நிலையில் அவருடைய திதி நாளான நேற்று நினைவு நிகழ்வு நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் இளையராஜா அவருடைய தம்பி கங்கை அமரன் கார்த்திக் ராஜா பிரபு என்று இளையராஜாவின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டனர். அதில் இளையராஜாவின் மகனும் பவதாரிணியின் சகோதரருமான யுவன் சங்கர் ராஜா மட்டும் கலந்து கொள்ளவில்லை.

யுவன் சங்கர் ராஜா வெளிநாட்டில் இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று வெங்கட் பிரபு கூறியிருந்தார். அதுபோல இந்த நிகழ்வில் பவதாரிணி பாடிய பல பாடல்களின் கச்சேரி நடத்தப்பட்டது. அதில் இளையராஜா தன்னுடைய மகள் பற்றி உருக்கமாக பேசியிருந்தார்.

Ilayaraja bhavatharini

அதுபோல பவதாரிணியின் சகோதரரான கார்த்திக் ராஜா கண்கலங்க பேசியிருந்தார். அதில் பவதாரிணி லீலாவதி ஹாஸ்பிடலில் தான் பிறந்தாள். அவள் பிறந்த உடன் அவளை முதல் முதலாக கொஞ்சிய அண்ணன் நான். எப்போதும் யுவன் கூட தான் பவதாரிணி கொஞ்சி விளையாடிட்டு இருப்பா. அவள் இலங்கையில் காலமாகி தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும்போது இங்கிருக்கும் தமிழ் மக்கள் எல்லோரும் பவதாரிணியை அவங்க வீட்டுப் பிள்ளையாக நினைத்து மிகவும் வருத்தப்பட்டனர். அந்த அன்பை நான் எங்கும் பார்த்ததில்லை.

Ilayaraja bhavatharini

தமிழ் மக்கள் மிகவும் தன்மையானவர்கள். இப்போது பவதாரிணியின் பாடல்களை நிகழ்ச்சியில் இசை கச்சேரி ஆக நடத்துகிறோம். அவளுக்கு இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் ரொம்ப பிடிக்கும். மேடையில் ரொம்ப பதட்டத்துடன் இருப்பாள், பவதாரிணிக்கு இசையமைப்பாளராக வேண்டும் என்று ஆசை இருந்தது. எனக்கு இயக்குனராக வேண்டும் என்று ஆசை இருந்தது.

Ilayaraja bhavatharini

ஆனால் அம்மா பவதாரிணிக்கு நல்ல குரல் இருக்கு என்று அவளை பாட வச்சாங்க என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். அதுபோல பவதாரணி குழந்தைகளை வைத்து ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்தாராம். ஆனால் அது கடைசி வரை நடக்காமல் போய்விட்டதால் பவதாரிணியின் ஆசையை நிறைவேற்ற இளையராஜாவின் குடும்பத்தினர் முடிவு எடுத்திருக்கிறார்கள். 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் எந்த இடத்தில் இருந்தாலும் இந்த ஆர்கெஸ்ட்ரா குழுவில் சேரலாம் என்று இளையராஜா குடும்பத்தினர் அறிவித்திருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+