இரு மலர்கள் சீரியல் பிரக்யாவா இது.. 37 வயதில் இப்படி ஒரு வாழ்க்கையா? விவாகரத்து நடிகரால் சர்ச்சை!?
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான இனிய இரு மலர்கள் சீரியல் மூலம் பிரக்யா கேரக்டரில் பிரபலமானவர் தான் ஸ்திரி ஜா.
இனிய இரு மலர்கள் சீரியல் ஜீ டிவியில் குங்கும் பாக்கியா என்ற பெயரில் ஒளிபரப்பானது.
இந்த சீரியலில் பிரக்யா கேரக்டரில் நடித்து வந்த நடிகை ஸ்ரிதி ஜா நிஜ வாழ்க்கையில் பல சோதனைகளையும் சர்ச்சைகளையும் சந்தித்து இருக்கிறார்.
பாலிவுட் திரைப்பட நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் சீரியல் நடிகர்களுக்கும் நம்ம தமிழ்நாட்டில் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதன் காரணமாகத்தான் அந்த மொழியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. அது தற்போது ட்ரெண்டாக வலம் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஹிந்தி சீரிலிலிருந்து தமிழில் டப் ஆனது தான் இனிய இரு மலர்கள் சீரியல். இந்த சீரியல் கும்கும் பாக்யா என்ற பெயரில் இருந்து இருமலர்கள் என்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த சீரியலில் பிரக்யா கேரக்டரில் கதாநாயகியாக நடித்து வந்த ஸ்ரிதி ஜாவிற்கு இந்த சீரியல் மூலமாக தமிழில் அதிகமான ரசிகர்கள் உருவாகி விட்டனர்.ஸ்ரிதி ஜா முதல்முறையாக தூம் மாசாவே தூம் என்ற ஹிந்தி சீரியல் மூலமாகத்தான் சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். இப்போது இவருக்கு 37 வயது ஆகிறது தான். 1986 பிப்ரவரி 26ஆம் தேதி பீகாரில் தான் பிறந்திருக்கிறார். சொந்த ஊர் பீகாரராக இருந்தாலும் இவர் மும்பை பெங்கால் என பல இடங்களில் மாறி மாறி இருந்திருக்கிறார்.

பி ஏ இங்கிலீஷ் படித்திருக்கும் இவருக்கு ஒரு தங்கச்சியும் இருக்கிறாராம். ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஸ்ரிதி ஜா தான் டாப்பராக இருந்திருக்கிறார். படிப்பில் மட்டுமல்லாமல் அப்பவே நடிப்பிலும் இவர் காலேஜில் கொடி கட்டி பறந்து இருக்கிறார். அதற்குப் பிறகு பல ஆடிஷனில் கலந்து கொண்டு தான் இவருக்கு முதல் சீரியல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து ரியாலிட்டி ஷோகலிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

தொடர்ந்து சீரியல்கள் ரியாலிட்டி ஷோ என்று நடித்து வந்த ஸ்ரிதி ஜாவிற்கு ஒரு திருப்பு முனையை கொடுத்தது என்றால் அது தில் சே தில் சுபா சௌபாக்கியவதி பாவா என்ற சீரியல் தானம். அதற்குப் பிறகு 2004 ஆம் ஆண்டு வெளியான கும்கும் பாக்யா சீரியல் தான். ஸ்ரிதி ஜாவிற்கு பெரிய அளவில் வெற்றியை கொடுத்து இருக்கிறது. அந்த சீரியல் மூலமாகத்தான் தமிழ் ரசிகர்களின் மத்தியிலும் பிரபலமாகி இருக்கிறார். கிட்டத்தட்ட இந்த சீரியல் ஆறு வருஷத்துக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்தது.

இனிய இரு மலர்கள் சீரியலில் அபி பிரக்யா ஜோடி பலருடைய ஃபேவரிட் என்று தெரியும். இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பை பாலிவுட் திரும்பிப் பார்த்து வியந்து போனது அதற்குப் பிறகு ஒரு சில ரியாலிட்டி ஷோக்கலில் ஸ்ரிதி ஜா கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் இவரைப் பற்றி பல தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இவரோடு நடித்த நிறைய நடிகர்கள் உடன் சேர்ந்து கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்கள்.
37 வயதாகியும் இவர் என்னும் திருமணம் ஆகாமல் தான் இருக்கிறார். இவர் நடிகர் குணால் கபூர் ரோடு இருவருக்கும் காதல் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. அந்த நேரத்தில் இவர்கள் எதற்கும் எந்த பதிலும் சொல்லாமல் இருந்து வரும் நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து அதிகமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அதனாலேயே இவர்கள் இருவரும் தங்களுடைய காதலை வெளியே காட்டிக் கொள்ளாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்ற தகவல்களும் பரவி வந்தது.
இரு மலர்கள் சீரியல் பிறகு பிரக்யாவை காணவில்லை என்று நிலையில் இவர் இறந்து போய்விட்டார் என்று பல நெகடிவ்வர்ஸ் வதந்திகளை பரவ விட்டிருக்கிறார்கள். பலர் எடிட் பண்ணி அவர் இறந்து போய்விட்டது போன்ற வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். அது மட்டும் அல்லாமல் அவருக்கும் அவருடைய ஹஸ்பண்டுக்கும் ஏதோ பிரச்சனை அதனால் தான் அவர் டைவர்வைஸ் எல்லாம் வாங்கி விட்டார் என்றெல்லாம் கூட அவரைப்பற்றி வதந்திகள் பரவி வந்தது. ஆனால் அவருக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.












Click it and Unblock the Notifications