Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல பாடகி கைதாகிறாரா? கொஞ்ச நஞ்ச பேச்சா? தனுஷ், ஆண்ட்ரியா, பாலச்சந்தர்.. ஒருத்தரை விடல.. பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபலங்கள் மீது பாடகி சுசித்ரா , தொடர்ந்து புகார்களை சொல்லி வரும்நிலையில், நடிகை ஒருவர் சுசித்ரா மீது போலீசில் புகார் தந்துள்ளார்.. இந்த புகார் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

சுசித்ரா என்றாலே அது சர்ச்சை என்றாகிவிட்டது.. எப்போது பேட்டி தந்தாலும், சர்ச்சையான வகையில் கருத்து சொல்லி சிக்குபவர்களில் சுசித்ராவும் ஒருவராக இருந்து வருகிறார்.

television suchitra

அதனால் சுசித்ரா தரும் பேட்டிகள் சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படும்.. சுச்சி லீக்ஸ் முதல் இப்படியான பரபரப்புகள் தொடர்ந்து வருகிறது. இதற்கு பிறகு சுசித்ரா ஒதுங்கியிருந்தார்.. அவர் எங்கே இருக்கிறார் என்றுகூட பலருக்கும் தெரியாத நிலையில், மீண்டும் கோடம்பாக்கத்துக்குள் என்ட்ரி ஆகியுள்ளார்.

நடிகர்கள்: வந்ததுமே தனுஷ், ஆண்ட்ரியா, ரீமா கல்லிங்கல் என ஒவ்வொருவர் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசி வருகிறார்.. இவர் சொல்லும் அத்தனை குற்றச்சாட்டுகளும் பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகின்றன..

"நடிகை ரீமா கல்லிங்கல் போதை பார்ட்டி வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.. அந்த பார்ட்டியில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு போதை பயன்படுத்தியிருக்கிறார்கள்.. போலீஸ் ரெய்டும் நடந்தது.. அதையெல்லாம யாருமே கேட்கலியே" என்று கூறியிருந்தார்.

போதை பார்ட்டி: இதற்கு நடிகை ரீமா கல்லிங்கல், உடனடியாக பதிலை தந்திருந்தார்.. "2017ல் சுசித்ரா பாலியல் துன்புறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அவதூறாக பேசினார்.. பாதிக்கப்பட்டவர்களுக்கு அது முன்கூட்டியே தெரியும்.. என்னுடைய வீட்டில் போதை பார்ட்டி நடந்து, நான் கைதானதாக சொல்லியிருக்கிறார். அப்படி எதுவுமே நடக்கவில்லை. எனவே சுசித்ரா மீது சிறப்பு புலனாய்வு பிரிவில் புகார் தந்துள்ளேன்" என்று கூறியிருந்தார்.

ஆனால், இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், சுசித்ரா மீது கொச்சி போலீசிலும் ரீமா கல்லிங்கல் ஆன்லைன் மூலம் புகார் தந்திருக்கிறாராம்.. ஒருவேளை, இந்த புகார் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், நடிகை சுசித்ரா விரைவில் கைதாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது..

பாலசந்தர்: கடந்த வாரம், மறைந்த இயக்குனர் பாலசந்தர் குறித்தும் சுசித்ரா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள், தமிழ் திரையுலகினரை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.. இதற்கே சுசித்ராவுக்கு நிறைய பேர் கண்டனங்களையும் தெரிவித்தார்கள்... அதேபோல, மணிமேகலை - பிரியங்கா மேட்டரிலும் உள்ளே நுழைந்து சர்ச்சை வீடியோக்களை வெளியிட்டிருந்தார் சுசித்ரா..

தமிழ் திரையுலகம் தொடர்ந்து சுசித்ரா விஷயத்தில் பொறுமை காத்தாலும், மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் விடவில்லை.. போதை விருந்து நடத்தி, பெண்களும், ஆண்களும் கலந்து கொண்டதாக கூறி சுசித்ரா கூறியிருந்ததற்கு, இன்று புகார் மேல் புகார்களை தெரிவித்துள்ளார்..

விசாரணை ஆன்லைன் மூலம் ரீமா கல்லிங்கல் அளித்த இந்த புகார் மீதான நடவடிக்கையை எடுக்குமாறு எர்ணாகுளம் காவல் உதவி கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாம்.. எனவே, பாடகி சுசித்ராவை கைது செய்து இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக விசாரணை நடத்துவார்கள் என்றும் தெரிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+