செம்பா இவ்ளோ நல்லவளா... புருஷனே இப்படி அழறானே...
சென்னை: விஜய் டிவியின் ராஜா ராணி சீரியல் ஒரு விதமான ரசிகர்கள், ரசிகைகள் மட்டுமில்லாம சீரியல் ஆர்வலர்களையும் கவர்ந்திருக்கு.
வேலைக்காரியா வீட்டுக்கு வந்து, எல்லார் மனசிலயும் இடம் பிடிச்சு செம்பாவுக்கு இது ரொம்ப சோதனையான காலமா போயிகிட்டு இருந்துச்சு.காரணம் வினோதினி வீட்டை விட்டு ஓடிப்போனதுதான்.
ஆனா, காதலுக்கு மரியாதை ஸ்டைலில் ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்காம பேசி முடிவு பண்ணி வீட்டுக்கு திரும்பி வந்துடறாங்க. விநோதினி வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பா கொஞ்சறாங்க.
"தல" ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்.. மே 1ல் விஸ்வாசம் விருந்து!
வீட்டு பொண்ணு
அண்ணன் ரெண்டு பேர், அண்ணி ரெண்டு பேர் வினோதினி நம்ம வீட்டு பொண்ணு, நம்மை விட்டு போக அவளுக்கு மனசு வராதுன்னு சொல்றாங்க. ஆனா, கார்த்திக்கும், அவன் பொண்டாட்டி செம்பாவும் மட்டும் ஒண்ணும் பேசலை.
பயம்
யாருமே மனசுல இருக்கறதை பேசலைன்னு எனக்கு தெரியும். அப்படி கோவப்பட்டு பேசினா நான் மறுபடியும் வீட்டை விட்டு போயிருவேன்னு பயம் உங்களுக்கு. இனி அப்படி ஒரு தப்பை செத்தாலும் செய்ய மாட்டேன்னு சொல்லிட்டு கார்த்திக்கிடம், அண்ணா நீ என்ன ஒண்ணுமே சொல்லலைன்னு கேட்கறா.
சரியான அடி
அவன் என்ன சொல்றது.. நீதான் வந்துட்டியே அது போதும்னு சொல்றான். நீங்க என்ன அண்ணி பேச மாடறீங்கன்னு கேட்கறா. அவ்ளோதான் கன்னத்துல ஒரே அடி விடறா செம்பா. எந்த வீட்டுல இது நடக்கும்னு தெரியலை.
பொண்ணாம்
வீட்டு பொண்ணை, வாழ வந்த பொண்ணு பெத்தவங்க கூட பொறந்தவங்க முன்னாலேயே அடிக்குதாம். குடும்பத்துல நடக்கற தப்பை
தட்டி கேட்கற மாதிரி அவ்வளவு நல்ல பொண்ணாம் செம்பா.
மெசேஜ்தான்
அதுக்கு ஏத்த மாதிரி வினோதினி பேச ஆரம்பிக்கறா... உங்களில் யார்ரை பத்தியும் நான் நினைக்கலை. செம்பா அண்ணி அனுப்பிய மெசேஜ்தான் என்னை வரவழைச்சுது. என்னை எல்லாரும் வீட்டு மகாலட்சுமின்னு சொல்றீங்க.. உண்மையில அண்ணி நீங்கதான் இந்த வீட்டு மகாலட்சுமின்னு சொல்றா.
அழறான்
அத்தனை உருக்கமா வினோதினிக்கு மேசேஜ் அனுப்பி இருக்கா செம்பா. குடும்பமே அந்த வாய்ஸ் மெசேஜை கேட்குது. எல்லாரும் ஒரு மாதிரி பார்த்து நிற்க புருஷன் கண்ணீர் விட்டு அழறான்ப்பா.. அவ்ளோ நல்ல பொண்ணாம் செம்பா.