செம்பருத்தி கார்த்திக் 12ம் வகுப்பு ஃபெயிலாமே...!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் குடும்ப விருதுகள் விழா இந்த வாரம் ஞாயிறும் தொடர்கிறது. சிறந்த ஹீரோயினுக்கான விருது செம்பருத்தி பார்வதிக்கு கிடைத்தை கடந்த வாரம் ஒளிபரப்பினார்கள்.
செம்பருத்தி சீரியல் பெரும் எதிர்பார்ப்புடன் சீரியல் ஆர்வலர்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. இதில் ஆதியாக நடிக்கும் கார்த்திக் பல குடும்பப் பெண்களின் மனம் கவர்ந்தவர்.
நம்ம குடும்ப பெண்கள் சீரியல் பார்த்து அவர்களை பிடித்து விட்டால், அவரை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து சிலாகிப்பார்கள். அப்படித்தான் அவர்களுக்கு செம்பருத்தி கார்த்திக்.
இந்த வாரமும்
கடந்த வாரம் முதல் ஜீ தமிழ் டிவியின் குடும்ப விருதுகள் வழங்கும் விழாவை ஜீ தமிழ் டிவி ஞாயிற்று கிழமைகளில் ஒளிபரப்பி வருகிறது. கடந்த வாரம் செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து வருபவர் சிறந்த ஹீரோயினுக்கான விருதை தளபதி விஜய் பெற்றோர் கையால் வாங்கினார்.
பார்வதி விஜய் அண்ணா
மகிழ்ச்சியில் திளைத்த பார்வதி விஜய் அண்ணாவை கேட்டேன்னு சொல்லுங்க என்றபோது அரங்கமே அதிர்ந்தது. விஜயின் அம்மா ஒரு முறை பெரிய ஐயான்னு கூப்பிடுன்னு சொல்ல, பார்வதி பெரிய ஐயான்னு கூப்பிட்டு அனைவரையும் ரசிக்க வைத்தார். தளபதியின் மேடைப் பேச்சு ஒன்றை அதாவது உசுப்பேத்தறவங்க கிட்டே உம்முன்னும் என்ற வசனத்தை பேசி அதிர வைத்தார்.
செம்பருத்தி ஆதி
இந்த வாரம் செம்பருத்தி சீரியலின் ஆதி கேடயம் வாங்கப் போகிறார். ஆதி பொறுமையாக இருக்கார். நிஜத்தில் கார்த்திக் யாருன்னு கேட்டபோது, ஆதி பொறுமையானவன்.,கார்த்திக் அப்படி இல்லைன்னு சொன்னார். இந்த அவார்ட் வாங்கின உங்களுக்கு மன நிலை எப்படி இருக்குன்னு கேட்டபோது, தன்னடக்கமா சொல்லணும்னா வேணாம் என்னை விட்ருங்களேன்னு இருக்கு.
இது வேணும்
செல்ஃபிஷா சொல்லணும்னா இது வேணும்.. இல்லேன்னா 10 பைசாவுக்கு மதிக்க மாட்டாங்கன்னு இருக்குன்னு சொன்னார். நீங்க என்ன படிச்சு இருக்கீங்கன்னு கேட்டபோது.. சொல்லலாம்ல..சொல்றேன் இதுல என்ன இருக்கு.. 12ம் வகுப்பு ஃபெயிலுங்கன்னு சொன்னார். இதல்லாம் பரவாயில்லை...நானும் படிக்காத மேதைதான்னு ஒரு இடத்தில் சொனனார்..அதை சொல்லி இருக்க வேணாமேன்னு தோணுது!