பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முடிவு இதுதானா? கடைசியில் நிலைமை இப்படி ஆகிவிட்டதே.. செம டுவிஸ்ட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 4 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் எதிர்பாராத வகையில் முடிவு வரப்போகிறது என்றும் கூறப்படுகிறது.
இது பற்றி பல தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில சீரியல்கள் தான் பல வருடங்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஒரு சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. டிஆர்பியிலும் டாப் 10 இடங்களில் இந்த சீரியல் முன்னணி இடத்தை பிடித்திருக்கிறது.
இந்த நிலையில் சமீப காலமாக இந்த சீரியல் சுவாரஸ்யம் குறைந்து விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரவு இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி பரவி வருகிறது. அதுவும் இந்த மாதத்தோடு இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீரியலில் எதிர்பார்க்காத வகையில் சீரியல் முடிவும் இருக்கப் போகிறது என்று கூறப்படுகிறது.
அதாவது பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தில் அண்ணன் தம்பிகளுக்குள் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்து கொண்டே இருந்தது. அதையெல்லாம் வெற்றிகரமாக ஒவ்வொரு சூழலிலும் குடும்பத்தினர் கடந்து வந்து கொண்டே இருந்தனர். பல போராட்டங்களும் சந்தோஷங்களும் இவர்களுடைய வாழ்க்கையில் இருந்தாலும் சமீப காலமாக குடும்பத்தில் அடுத்தடுத்த பிரச்சனைகள் மட்டும்தான் இருக்கிறது. அதுவும் ஜீவா வீட்டைவிட்டு வெளியேறியதில் இருந்து அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருந்தது.
அதையெல்லாம் ஒரு வழியாக இவர்தான் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முடிவுக்கு கொண்டு வந்து இருக்கிறது. அந்த வகையில் பெரிய அளவில் பிரச்சினையாக இருந்த தனம் கேன்சர் பிரச்சனையில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். கண்ணனும் எல்லா பிரச்சனைகளிலும் இருந்து மீண்டு வேலையில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் இதுவரைக்கும் ஆரம்பத்தில் இருந்து பண திமிரில் ஆட்டம் போட்ட ஜனார்த்தனன் இப்போது அவருடைய இரண்டாவது மருமகனால் பிரச்சனையில் மாட்டி இருக்கிறார்.

இந்த நிலையில் ஜனார்த்தனன் பிஸினஸில் சரிவடைந்து அவமானப்பட்டு நிற்கும்போது பாண்டியன் ஸ்டோர் குடும்பம் அவருக்கு உதவி செய்து அவர்களுடைய பெருந்தன்மையை காட்டுவது போன்று சீரியல் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஜனார்த்தனன் பல நேரங்களில் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது அவருக்கு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் உதவி செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் அதை மறந்து இருக்கிறார். ஆனால் சீரியலின் முடிவில் கூட அவருக்கு பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் உதவி செய்வது போன்று தான் கதை வர இருக்கிறது என்று கூறப்படுகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications