Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென சோசியல் மீடியாவில் இருந்து விலகும் பிரியங்கா நல்கரி.. உருக்கமாக அவர் வெளியிட்ட பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான "ரோஜா" சீரியல் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை "பிரியங்கா நல்கரி" தான், இன்ஸ்டாகிராமில் இருந்து விலகப்போவதாக திடீரென்று போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு சில வார்த்தைகளை அதில் பகிர்ந்து இருக்கிறார்.

நடிகை பிரியங்கா நல்கிரி, "ஜீ தமிழ்" சேனலில் ஒளிபரப்பாகி வரும் "நளதமயந்தி" என்னும் சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் நிலையில் சமீபத்தில் தன்னுடைய திருமண புகைப்படங்கள் எல்லாவற்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து டெலிட் செய்திருந்தார்.

Is this the reason why Priyanka Nalkari deleted her Instagram ID

இதைத்தொடர்ந்து தான் இணையத்தில் இனி எந்த சோசியல் மீடியா அக்கவுண்டில் இருக்கப் போவதில்லை என்று இவர் முடிவு எடுத்திருப்பது ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்களின் மத்தியில் அறிமுகம் கிடைத்திருந்த நிலையில் இவருக்கு அதிகமான வரவேற்பும் கிடைத்துவிட்டது.

முதல் சீரியலிலே இவருக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர். சீரியல் தொடங்கிய முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரைக்கும் இவரே கதாநாயகியாக மக்கள் மனதில் பதிந்திருந்தார். அதை தொடர்ந்து அந்த சீரியல் முடிவடைந்ததும் அடுத்ததாக இவர் என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

அப்போது இவர் ஜீ தமிழில், "சீதாராமன்" என்று சீரியலில் கதாநாயகியாக அறிமுகமாகி இருந்தார். அந்த சீரியல் தொடங்கி சில மாதங்களில் சீரியலில் இருந்து திடீரென விலகிவிட்டார். அந்த நேரத்தில் ஏற்கனவே இவர் காதலித்து வந்த நடிகர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணத்திற்கு ராகுல் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்று பேட்டியில் பிரியங்கா நல்கரி கூறியிருந்தார்.

ஆனால் திருமணம் ஆன ஒரு சில மாதங்களில் இவர்கள் இருவரும் பிரிந்து இருப்பதாக இணையத்தில் செய்திகள் வெளியாகி வந்தது. அதைத்தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்த பிரியங்கா நல்கரி ரசிகர் ஒருவர் நீங்கள் தனியாக இருக்கிறீர்களா? உங்கள் கணவரை விட்டு பிரிந்து விட்டீர்களா? என்று கேட்ட கேள்விக்கு ஆம் என்று பதில்களை கொடுத்திருந்தார்.

அதுபோல தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்தார். இப்படியான நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நான் நாளை மதியம் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை டெலிட் செய்ய போகிறேன். எனக்காக ஒரு சிலர் ப்ரோமோஷனுக்காக சாரீஸ், ஜுவல்ஸ் என சிலவற்றை அனுப்பி இருக்கிறீர்கள். அவர்கள் எனக்கு டிஎம் செய்யுங்கள். அதை நான் ரிட்டன் பண்ணி விடுவேன். அதுபோல நான் இனி நெகட்டிவ் விஷயத்தில் இருந்து தள்ளி இருக்கப் போகிறேன்" என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

இணையத்தில் ஆக்டிவாக அடிக்கடி ரசிகர்களிடம் லைவில் பேசிக் கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி ஏன் இந்த முடிவெடுத்தார் என்று ரசிகர்கள் அதிகமானோர் கேள்வி கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் அவர் அவருடைய கணவரோடு ஏற்பட்ட பிரச்சனையால் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+