Kaatrin Mozhi Serial: கடவுளே...சொந்த வீட்டில் திருடி சீன போடறானே...!
சென்னை: வாய் பேச முடியாத அக்காவை தள்ளிவிட்டு பணத்தைத் திருடிட்டு வந்து கேர்ள் ஃபிரண்டுகிட்டே சீன போடறானேன்னு கடுப்பா வருதுங்க.
விஜய் டிவியின் காற்றின் மொழி சீரியலில் வாய் பேச முடியாத கண்மணியை பாடாய் படுத்தறாங்க. பார்க்க பார்க்க உள்ளம் குமுறுது. இதயம் பலஹீனமானவங்க இந்த மாதிரி சீரியல்களை நிஜமா பார்க்காதீங்க.
காற்றின் மொழி படம் கூட வாய் பேச முடியாத காது கேட்காத பெண் கதாபாத்திரத்தை வச்சுத்தான் எடுத்தாங்க. அதில் கூட இவ்வளவு கொடுமை நடக்கலீங்க.

அம்மா கண்மணி
கண்மணி வாய் பேசமுடியாமா பொறந்துட்டான்னு அவளை வெறுத்து ஒதுக்கறாங்க அப்பாவும், பாட்டியும். அம்மா மட்டும்தான் கண்மணிக்கு ஆதரவு. அவளை வச்சு கதையில விளையாடி இருப்பது ரொம்ப பரிதாபமா இருக்குது. உங்களுக்கு வேற மாதிரி கதை பின்ன தெரியலையா?

வெறுக்கறான் தம்பி
தம்பி அப்பாவுடன் சேர்ந்து அக்கா கண்மணியை வெறுக்கறான். அவள் வரையும் படத்தை தான் வரைந்ததாக சொல்லி பணக்கார பெண்ணை காதல் வலையில் வீழ்த்தறான். கெட்ட சவகாசம். அப்பாவிடம் நல்ல பிள்ளை மாதிரி நடிக்கறதுன்னு பார்க்கவே கோவம் ஆத்திரம் வருது. .

அக்காவுக்கு கல்யாணம்
அக்காவின் கல்யாணத்துக்கு வச்சிருந்த பணத்தை கடன் வாங்கி நெருக்கடியானதில், தம்பியே பணத்தை முகமூடி போட்டு திருடிக்கிட்டு, காவலுக்கு இருந்த கண்மணியை தள்ளிவிட்டுட்டு போறான். சரிந்து கீழே விழுகிறாள் கண்மணி.

ஃபிகர் சீன்
பணத்தை கடன் வாங்கியவர்களிடம் திருப்பி கொடுக்கும்போது இவனின் ஃபிகர் பார்த்துட.. அவங்ககிட்ட கெஞ்சி கொஞ்ச நேரம் சீன் போட்டுக்கறேன்னு சொல்லிட்டு, இந்த இந்த பணத்தை வச்சு உங்கம்மாவை காப்பாத்துன்னு ஹீரோ வேஷம் போடறான். ஐயே..நிஜமா பார்க்க முடியலை.அவ்ளோ புது காட்சின்னு டைரக்டர் நினைச்சுட்டார்.












Click it and Unblock the Notifications