சிங்கம்னாங்க.. எலிக் குட்டி மாதிரி இருக்கு.. வேகமும் இல்லை... வீரியமும் இல்லை!
சென்னை: விஜய் டிவியில் கடந்த திங்கள் முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியல் கடைக்குட்டி சிங்கம். சூப்பர் டூப்பர் ஹிட்டான படத்தின் பேரை சீரியலுக்கு வச்சிருந்ததுல சீரியல் எப்படி இருக்குமோன்னு எதிர்பார்ப்பு அதிகமாத்தானே இருக்கும்.
முத்து, மருது இருவரும் கிராமத்து பண்ணையார் பணக்கார வீட்டு பிள்ளைகள். நம்ம மருத்துதான்ங்க கடைக்குட்டி சிங்கமா வரார். மீசையை அப்பப்போ முறுக்கிகிட்டு என்னவோ மேல்நாக்குல பேசற மாதிரி அந்த ஊர் கிராமத்து பாஷையாம். ..அதை பேசறார்.
டப்பிங்குல யாராவது கூட இருந்து அவருக்கு பாஷை நல்லா சொல்லித் தர சொல்லுங்க. பார்க்கறதுக்கு லொகேஷன்ஸ் நல்லாத்தான் இருக்கு. ஆனா, மெயின் விஷயமே கதைதானே அதுல கவனம் செலுத்தினா மக்களின் எதிர்பார்ப்பை ஓரளவுக்கு நிறைவேத்தலாம்.
எடுத்த உடனே வெளி நாட்டுல படிச்சுட்டு வர முத்துக்கு வீட்டுல மீனாட்சியப் பேசி முடிச்சுட்டோம்னு சொல்றாங்க. என்னங்க கலாச்சாரம் இது, இப்போ கிராமத்துல கூட மகனிடம் சொல்லாமல், சம்மதம் கேட்காமல் இப்படிப்பட்ட திருமணங்கள் நிச்சயிப்பதில்லை.
மாப்பிள்ளை என்னடான்னா அவ்ளோ அழகா மகாலட்சுமி மாதிரி இருக்கற பொண்ணுகிட்ட இந்த திருமணத்துல எனக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்றான். பொண்ணுக்கு என்னடா கொறைச்சல்னு நாம கேட்க முடியுமா... அவன் மனசுல யாரோ என்னவோ...
நிஜத்துல நடக்கறதைத்தான் கதையா சொல்லுவாங்கன்னு பலரும் சொல்ல கேட்டு இருப்போம். அதே மாதிரி காலம் மாறுது... கடைக்குட்டி சிங்கம் படத்துல கார்த்தி கதாபாத்திரம் மனசுல நின்ன மாதிரி, இந்த சீரியலில் மருது கதாபாத்திரத்தை நிக்க வைங்கப்பா...மக்கள் நல்ல சீரியல் பார்க்கத்தான் காத்திருக்காங்க.
நிலா நல்லவளா இல்லை நீலாம்பரியா? பாருங்க பாருங்க... குடும்பம் குளோஸ்தான்!