முதலிரவுல கையை பிடிச்ச உடனே மயங்கிட்டியே அதை சொன்னியா கல்பனா?
சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ஒரு குடும்பம் எப்படி இருக்கணும் என்பதை மிக அழகா காமிச்சு இருக்காங்க.
இப்போது மூணாவது தலைமுறை மருமகளா ரோஜா வந்திருக்கா. முதல் தலைமுறை மருமக வடிவுக்கரசி... அதாவது அன்ன பூரணி அம்மா.
ரெண்டாவது தலைமுறை கல்பனா... அதாவது அர்ஜுனின் அம்மா, அன்னபூரணி அம்மாவின் மருமகள். இவங்க மருமகள் ரோஜா மூணாவது தலைமுறை மருமகள்.
பார்...முழுசா அருந்ததி பேயா மாறி இருக்கும் சண்முகத்தை பார்...!
மூணு தலைமுறை
முதல் தலைமுறை மாமியாரும், மருமகளும் ரொம்ப ஒத்துமை. ரெண்டாவது தலைமுறை மருமகள் கல்பனாவும், அவங்க மருமகள் ரோஜாவும் ரொம்ப ஒத்துமை.
ஜெனரேஷன் கேப்
இதுல பெரும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது என்று பார்த்தால் கல்பனாவுக்குத்தான். தனது மாமியாருக்கும், தனது மருமகளுக்குமான ஜெனரேஷன் கேப் ரொம்ப பெரிசு.
ரொம்ப ஜாலியா
அதை இவங்கதான் இடையிலிருந்து சமாளிச்சு குடும்பத்தை ரொம்ப ஜாலியா வச்சு இருக்காங்க. மகன் மருமகள் ரோஜாவுடன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து ரசிக்கறது...
அவங்களோட இளமைக் காலத்தை பார்த்து, தங்களது இளமை காலத்தை நினைவு கூர்ந்து சிரிக்க வைக்கறதுன்னு கல்பனா கலக்கறாங்க.
ஜோடியா பைக்ல
மகனையும், மருமகளையும் பைக்ல ஜோடியா அனுப்பி வச்சுட்டு, வேலைக்காரி சுமதியிடம் நான் கூட அர்ஜுன் அப்பா கூட பைக்ல போகத்தான் ஆசைப்படுவேன்..கார் சாவியைஒளிச்சு வச்சுருவேன் சுமதிக்கான்னு வெட்கத்தோடு சொல்றாங்க.
நான் புடிச்சப்போ
அப்போது அங்கு வரும் கல்பனாவின் புருஷன் பிரதாப்...எல்லாத்தையும் சொல்லிட்டியா கல்பனா..நம்ம முதலிரவுல உன் கையை நான் புடிச்சப்போ நீ மயங்கி விழுந்துட்டியே..அதை சொன்னியான்னு கேட்கறான்... ஐயையோ... இல்லைங்கன்னு வெள்ளந்தியா கல்பனா சொல்ல,
ஷாக் கர்ப்பம்
நான் கூட உன் கையை பிடிச்சு பார்த்துட்டு நீ கர்ப்பமா இருக்கேன்னு ஷாக் குடுத்தேனேன்னு சொல்ல எல்லாரும் சிரிக்கறாங்க. குடும்பத்தில் கல்பனா மாதிரி மருமகளாவும், மாமியாராகவும் இருக்கறவங்க இப்படி இருந்தா குடும்பம் சந்தோஷமா இருக்கும்.