அடுத்தடுத்து காஞ்சனா பார்ட்ஸ் ஹிட்... எப்படி இது?
சென்னை: முன்பு ஹாலிவுட் படங்கள் மட்டுமே பல பாகங்கள் என்று எடுக்கப்பட்டு வெற்றி அடைஞ்சு இருந்தது. இது இந்தியாவிலும் டிரண்ட் ஆகிவிட்ட நிலையில், இப்போ காஞ்சனா 3 வரைக்கும் சூப்பர் ஹிட். இது நமக்கான பெருமையே..
வெற்றி பெற்ற படங்கள்னா அதன் பார்ட் 2 எடுப்பதில் எல்லாரும் மும்முரமா இருக்காங்க. ஆனா, சொல்லிக்கற மாதிரி சில படங்கள் மட்டுமே பார்ட் 2 வெற்றி அடைஞ்சு இருக்கு.
காஞ்சனா,பாகுபலி இப்படி ஒரு சில படங்களை மட்டுமே பார்ட் 2 வெற்றி பெற்றதை முன் உதாரணமா சொல்லலாம். காஞ்சனா இப்போ 3 வரைக்கும் வந்துருச்சு.
பாகுபலி படம் முதல் பாகத்தைவிட ரெண்டாவது பாகம் இரண்டு மடங்கு வெற்றி.காஞ்சனா 3 இன்று வரை தியேட்டரில் சக்கைப்போடு. என்ன காரணம்னா வெற்றி ஃபார்முலாவை சரியான விதத்துல கையாளணும்.
மாபெரும் வெற்றி பெற்ற படங்களே பார்ட் 2 எடுக்கும்போது அட்டர் பிளாப் ஆனாலும், பலரும் அதைப் பாடமா எடுத்துக்கறதில்லை. தன்னம்பிக்கையோடு பார்ட் 2 எடுக்கறவஙகக வெற்றி ஃபார்முலாவை முதல் படத்தில் கையாண்ட மாதிரி கையாள்வதில்லை.
இதில் லாரன்ஸ் மாஸ்டர் பெஸ்ட்னு சொல்லலாம். எப்போதும், எதிலும் ஒரு ரசிகனா இருந்து ஒவ்வொரு காட்சியையும் எடுக்கறார்னு இண்டஸ்ட்ரியில பாராட்டறாங்க. அது பேய் படமோ, ஒரே மாதிரி படமோ... மக்களின் நாடியை தனது வெற்றி ஃபார்முலாவா ஒவ்வொரு காட்சிக்கும் கணக்கு போடறார்.
பாகுபலி கேட்கவே வேணாம்... ரெண்டு ஸ்கிரிப்டையும் பக்காவா தயார் செய்த பிறகே படப்பிடிப்பையே துவங்கிய புத்திசாலி இயக்குநர்.
பார்ட் 2 தயாரிச்சு பல இயக்குநர்கள் நினைப்பது முதல் பாகத்தை வெற்றி அடைய செய்து இருக்கோம். சோ, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு தியேட்டருக்குள் வருவாங்கன்னு மட்டும்தான் அவர்கள் எதிர்பார்ப்பா இருக்கு.
சிங்கம் 2 படத்தில் முதல் பார்ட் முடிவின் தொடக்கமாத்தான் 2ம் பாகம் இருக்கணும்னு ஹரி நினைச்சதுதான் சிங்கம் பார்ட் 2 தோல்விக்கு காரணம்.
மணி அடிச்சா அசெம்பிள் ஆகிடணும்...கூட்டு குடும்பத்துல....செம ஐடியா!
இனி பார்ட் 2 எடுக்க விரும்புபவர்கள் முதல் பாகத்துக்கு உழைத்ததை விட பலமடங்கு அதிகமா உழைக்கணும் என்பதே பார்ட் 2 வுக்கான வெற்றி ஃபார்முலா என்று இண்டஸ்ட்ரியில பேசிக்கறாங்க.