ஒரு தியானம் இல்லை... யாகம் இல்லை.. சாமியாடினா சாமி வருமா?
சென்னை: சன் டிவியின் கண்மணி சீரியல் நிஜமா ஏதோ போற போக்குன்னு போயிகிட்டு இருக்கு.
சின்னவரு..முத்துச்செல்வி,கண்ணன்.. சவுந்தர்யா இப்படித்தான் மாத்தி மாத்தி காம்பினேஷன் சீன்ஸ்.
சும்மா சாதாரணமா முகத்தில் ஓவர் எமோஷனல் காமிக்கற முத்துச்செல்வி, எப்போதும் அமைதியா பேசுற ரொம்ப ரொம்ப நல்லவளான சவுந்தர்யா.
செம்பாவை துரத்துவதிலேயே குறியா இருக்காரே... என்னவா இருக்கும்?
குழப்பம்
கல்யாணத்தில் ரொம்ப குழப்பம் இருக்கறதுனால குல தெய்வம் முன்னால கண்ணன் சாமியாடணும்னு விஜயலட்சுமி அம்மா சொல்றாங்க.
அடிமனசுல
சாமியாடினா அடி மனசுல இருக்கறது வந்துரும்னு சவுந்தர்யா சொல்றா.அன்னிக்கு நான் மனுஷனா இருக்கமாட்டேன்..சாமி வந்துருச்சுன்னா எனக்குள்ள சாமி வந்து கேட்கறவங்க கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுவேன்னு கண்ணன் சொல்றான்.
மக்கள்
கிராமம்..கிராமத்து வாழ்க்கை..கிராமத்து பழக்க வழக்கம் எல்லாமே ஓகேதான்.ஆனா, சாமியாடன்னு ஒரு நாள் குறிச்சு, அன்னிக்கு அதுவும் கண்ணன்தான் சாமியாடி குறி சொல்லுவான்னு சொல்றது..மனசுக்கு ஒப்பலை.
யதார்த்தமா
ஒரு பால்குடம் தூக்கினாலோ...அல்லது காவடி தூக்கினாலோ இப்படித்தான் அருள் வந்து சாமியாடுவாங்க..அது தெய்வ சம்பந்தப்பட்ட விஷயம்னு கூட எடுத்துக்கலாம்.
போரடிக்குது
அது என்னங்க..சாமியாடன்னு ஒரு நாள் குறிக்கறது.. அப்போ கண்ணன் மேல சாமி வந்து குறி சொல்லுவான்னு சொல்றது...என்ன கதையோ.. என்னமோ.. போரடிக்குது.