கல்யாணமாகி 2 மாசம்தான் ஆச்சு.. கீர்த்தி சுரேஷ் போட்டோவை உற்று பார்த்தால்.. திடீர் மாற்றம்
சென்னை: நடிகை மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), தன் அம்மாவைப் போலவே சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். 'இது என்ன மாயம்' படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான கீர்த்தி, அடுத்தடுத்து விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து டாப் ஹீரோயினாக உயர்ந்தார். கமர்ஷியல் படங்களில் மட்டும் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 'மகாநடிகை' என்கிற பயோபிக் படத்தில் நடித்ததால் அவரது கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தான் மகாநடிகை திரைப்படம் உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. தேசிய விருது வென்றதும் கமர்ஷியல் படங்களுக்கு டாடா காட்டிவிட்டு கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க ஆரம்பித்தார் கீர்த்தி. ஆனால் அவரின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ், தனது நீண்ட நாள் காதலரான ஆன்டனியை கடந்த டிசம்பர் மாதம் கோவாவில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி சிறப்பாக நடைபெற்றது. திரையுலக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இந்த விழாவில் கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் தனது சினிமா பணிகளில் மீண்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

திருமணத்துக்கு பின் அவர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தான் நடித்த இரண்டாவது பாலிவுட் படமான 'அக்கா' படத்தின் டீசரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். சரித்திர கதையம்சம் கொண்ட அப்படத்தில் கழுத்தில் வித்தியாசமான தங்க ஆபரணத்துடன் நடித்திருக்கிறார் கீர்த்தி.

'அக்கா' படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கீர்த்தி சுரேஷ் கழுத்தில் தாலி இன்றி வந்திருந்ததை பார்த்த ரசிகர்கள் அதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணமான சில நாட்களுக்குப் பிறகு, கீர்த்தி சுரேஷ் தாலியுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். திருமணத்துக்கு பின்னர் தான் பங்கேற்கும் விழாக்களில் கழுத்தில் மஞ்சள் கயிறு பளிச்சென்று தெரியும் அளவுக்கு வந்து கலந்துகொண்டார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால், சமீபத்தில் அவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்களில் தாலி அணியாமல் இருந்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள், "திருமணமாகி இரண்டு மாதங்களிலேயே தாலியை மறைத்து விட்டீர்களா?" என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்போது ஏதோ போலி புலி நகம் போன்ற ஆபரணத்தோடு அவர் போட்டோக்களை வெளியிட்டுள்ளாரே தவிர கழுத்தில் தாலியை காணோம். திருமணம் முடிந்ததும் வலுக்கட்டாயமாக தாலியை வெளியே காட்டிய கீர்த்தி இப்போது அதே போல வலுக்கட்டாயமாக தாலி அணியாத புகைப்படங்களை வெளியிட்டுள்ளாரே என்ற ரசிகர்களின் இந்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.













Click it and Unblock the Notifications