குடும்பங்களுக்குள் புகுந்து அவதூறு.. ‘குற்றம் நிரூபித்தால் உயிரோட விடக்கூடாது!’ குஷ்பு ஆவேச பேட்டி
சென்னை:தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தன்னுடைய நேரடியான பேச்சால் எப்போதும் கவனம் ஈர்த்து வருபவர் நடிகை குஷ்பு. எந்த விஷயமாக இருந்தாலும் தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லும் குஷ்பு, இந்த முறை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் குறித்து மிகவும் ஆவேசமாக பேசி கவனம் ஈர்த்துள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், சமூக வலைதளங்களில் பெண்களை அவமதிக்கும் போக்குகள், குடும்பங்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட்டு அவதூறு பரப்பும் சில யூடியூப் சேனல்கள் குறித்து கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொந்தளித்த குஷ்பு
பேட்டியில் பேசிய குஷ்பு, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் சமூகத்திற்கு மிகப்பெரிய களங்கம் என்று கூறினார். குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் சிலர் சட்ட loopholes மூலம் தப்பித்து விடுவது மக்களுக்கு வேதனை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்த குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறை அல்லது தூக்குத்தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும்" என்று அவர் ஆவேசமாக தெரிவித்தார்.
உங்க வீட்டிலேயே பண்ணிப் பாருங்க
இதோடு நிற்காமல், சமூக வலைதளங்களில் பெண்களின் உடல்களை மார்க்கிங் செய்து, புகைப்படங்களை பகிர்ந்து அவமதிக்கும் சிலரையும் குஷ்பு கடுமையாக விமர்சித்தார்.
"பெண்களின் உடலை மார்க்கிங் பண்ணி இணையத்தில் போடுறவங்க, ஒரு முறை தங்களோட வீட்டில் இருக்குற பெண்களை அப்படி பண்ணிப் பாருங்க... அப்போதான் அந்த வலி என்னனு புரியும்" என்று கடும் வார்த்தைகளில் எச்சரித்தார். இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
யூடியூப் சேனல்களுக்கு பதில்?
சமீபகாலமாக பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, விவாகரத்து, குடும்ப சண்டைகள் போன்ற விஷயங்களை வைத்து பல யூடியூப் சேனல்கள் கண்டெண்ட் உருவாக்கி வருவது குறித்து மறைமுகமாக குஷ்பு பேசியதாக பலர் கருதுகிறார்கள்.
"பணத்திற்காக அடுத்தவர்களின் குடும்ப வாழ்க்கைக்குள் புகுந்து, நேரில் பார்த்த மாதிரி அவதூறு பரப்புறவங்க தங்கள் வீட்டில் இருக்கும் தாய், மனைவி, அக்கா, தங்கை பற்றி ஒரு நிமிடம் நினைக்கணும்" என்று அவர் கூறியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

குஷ்புவின் நேரடி பேச்சு மீண்டும் வைரல்
குஷ்பு இதற்கு முன்பும் பல சமூக பிரச்சனைகள் குறித்து ஓபனாக பேசியிருக்கிறார். அரசியல், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் உரிமை, சமூக நீதிப் பிரச்சனைகள் என எந்த விஷயமாக இருந்தாலும் தன் கருத்தை தயக்கமின்றி வெளிப்படுத்தும் பிரபலங்களில் குஷ்பு முக்கியமானவர்.
அரசியல்வாதியாக இருந்தாலும், நடிகையாக இருந்தாலும், சில நேரங்களில் அவரது கருத்துகள் சர்ச்சையாக மாறியிருக்கின்றன. ஆனால் இந்த முறை அவர் பேசிய விஷயம் குறித்து சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?
குஷ்புவின் பேச்சு வெளியானதும் இணையத்தில் பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். "இதுதான் சொல்லணும்", "பெண்களை அவமதிப்பவர்களுக்கு இப்படித்தான் பேசணும்", "குஷ்பு பேசியது கடுமையான வார்த்தை தான்... ஆனா உண்மை" என்று பலர் பதிவிட்டு வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை கிளப்பிய குஷ்புவின் இந்த பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்













Click it and Unblock the Notifications