தேவராஜை காலி பண்றேன்னு சொன்ன நாகப்பன் வீட்டில் மீனில் குண்டு!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியல் நிமிஷத்துக்கு நிமிஷம் என்ன நடக்குமோ... ஏது நடக்குமோன்னு திகிலாகும்படி ரெண்டு குடும்பத்துக்கு இடையே விரோதம் வளருது.
கோயில் திருவிழாவுக்கு போகலைன்னு சொன்ன தேவராஜன், அதாவது நிழல்கள் ரவி, திருவிழாவுக்கு கிளம்பின நாகப்பனின் ஆட்களை போட்டுத் தள்ளி, அவரை கோயிலுக்கு போகவிடாம செய்துடறார்.
இப்போ போலீஸ் முன்னால தான் நல்லவன்.. போலீஸ் சொன்னதை அமைதியா கேட்டுகிட்டு வீட்டுலதான் இருந்தேன். ஆனா, ஆத்தா பட்டினி கிடப்பதை பொறுத்துக்க முடியாது. நான் திருவிழாவை நடத்தறேன்னு சொல்லிட்டு மேள தாளத்துடன் கிளம்பி திருவிழாவை நடத்தறார்.
சும்மாவே ஆடுவா... கால்ல சலங்கை வேற கட்டிட்டோம்... ஜிங்கு ஜிங்குன்னு ஆடுவாளே...!
நாகப்பன்
தன்னுடைய ஆட்களை கொன்ற தேவராஜை பழிவாங்குவேன்னு போலீசிடம் நாகப்பன் சவால் விட , தேவராஜ் வீட்டுக்கும், நாகப்பன் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடறாங்க.
அமைதி
தேவராஜ் அமைதியா இருந்து காரியம் சாதிக்கறவர்... நாகப்பன் அவசரப்பட்டு கத்தி கத்தி காரியத்தைக் கெடுத்துக்கறவர்னு போலீஸ் ஒரு கணக்கு போட்டு வேலை செய்யறாங்க.
பொண்ணுங்க
நாகப்பனின் ரெண்டு பொண்ணுங்களும் அப்பாவை எப்படி காப்பாத்தறதுன்னு யோசிக்கறாங்க. ரெண்டாவது பொண்ணு ரொம்ப பயந்த சுபாவம். முதல் பொண்ணு தைரியசாலி.
மீனில் பாம்
எப்படியோ கவனமா இருந்தும் தேவராஜை கொல்லுவேன்னு சொன்ன நாகப்பன் வீட்டுக்கு வந்த மீனில் பாம் வச்சுடறாங்க தேவராஜின் ஆட்கள். மீனவர்கள் நாகப்பனின் ஆட்கள் என்பதால் சுலபமா பாம் வைக்க முடியுது தேவராஜால்.
காப்பாத்தணும்
அப்பாவைக் காப்பாத்தணும்னு ரெண்டு பொண்ணுங்களும் துடிச்சு.. வீட்டுல வித்தியாசமா ஏதாவது நடக்குதான்னு ஆராய்ச்சி பண்றாங்க.. ரெண்டு பேர் கண்ணுலயும் பாமிருக்கும் மீன் தென்படலை.
வீட்டில்
தேவராஜ் வீட்டில் தன் தங்கை பொண்ணுக்கு கல்யாண ஏற்பாடுகள் செய்துகிட்டு மிக அமைதியா இருக்கார் அவர். தேவராஜின் மனைவியும், தங்கையும் இங்கே நாகப்பன் ஆட்களால் என்ன நடக்குமோன்னு கவலையில் இருக்காங்க.
இப்படி நடுநடுக்கத்தில் ரெண்டு குடும்பமும் தவிக்க..தேவராஜை விட நக்கப்பன் நல்லவர்ன்ற மாதிரி இப்போ தெரியுது.