கூலி திரைப்படத்திற்குப் பிறகு மௌனம் கலைத்த லோகேஷ்! "ரசிகர்களின் கற்பனைக்கு என்னால் படம் எடுக்க முடியாது!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியான 'கூலி' திரைப்படம், விமர்சன ரீதியாகக் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளைப் படைத்து வருகிறது. படம் வெளியாகி ஒரு மாதத்திற்குப் பிறகு, தனது மௌனத்தைக் கலைத்து, லோகேஷ் கனகராஜ் ஊடகங்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவர், 'கூலி' படத்தின் எதிர்பார்ப்புகள், விமர்சனங்கள் மற்றும் தனது அடுத்தகட்ட திட்டங்கள் குறித்துப் பேசிய கருத்துக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்
'கைதி' மற்றும் 'விக்ரம்' படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் உச்ச இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்த லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்துடன் இணைந்தபோது, 'கூலி' படத்திற்கான எதிர்பார்ப்பு வானளவு உயர்ந்தது. விஜய் நடித்த 'லியோ' படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை விடவும், 'கூலி' படத்திற்கு அதிகமாக இருந்தது. அதிலும், படத்தில் நாகார்ஜுனா, உபந்திரா, அமீர்கான் போன்ற பல நட்சத்திரங்கள் நடிப்பதாக வந்த தகவல்களும், படம் LCU-வில் இருக்குமா அல்லது 'டைம் ட்ராவல்' படமா என்ற ரசிகர்களின் யூகங்களும் இந்த ஹைப்பை மேலும் அதிகரித்தன.
லோகேஷ் கனகராஜ், இந்த ஹைப் படத்திற்குப் பாதகமாகிவிடக் கூடாது என்பதற்காக, படத்தின் அறிவிப்புகள், டீசர், ட்ரெய்லர் வெளியீட்டில் மிகவும் கவனமாக இருந்தார். சில இடங்களில் பேசும்போது கூட படம் டிக்கெட் காசுக்கு ஒருத்தாக இருக்கும், அதிகமான எதிர்பார்ப்போடு வராதீர்கள் படத்தை படமாக மட்டும் பாருங்கள் என்று கூட சொல்லி இருந்தார். ஆனால், ரசிகர்கள் தங்கள் கற்பனையில் உருவாக்கிய கதைகளும் எதிர்பார்ப்புகளும், விமர்சனங்களில் ஒருவித ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
மௌனம் கலைத்த லோகேஷ்
படம் வெளியான பிறகு வந்த எதிர்மறை விமர்சனங்கள் குறித்து இதுவரை பேசாமல் இருந்த லோகேஷ், இப்போது மனம் திறந்து பேசியுள்ளார். "கூலி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் LCU-வில் இருக்குமா, டைம் ட்ராவல் படமா என ரசிகர்கள் பேச ஆரம்பித்தார்கள். ஆனால், நான் இந்தத் தகவல்களை ஒருபோதும் சொல்லவில்லை. 18 மாதங்களாகப் படம் குறித்த தகவல்களை வெளியில் கசியவிடாமல் நான் பொத்திப் பொத்தி வைத்தேன்."
"ரசிகர்களின் எதிர்பார்ப்பை 100 சதவீதம் பூர்த்தி செய்யும்படி யாராலும் ஒரு படம் எடுக்க முடியாது, என்னாலும் முடியாது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறை சொல்ல முடியாது. அவர்களின் எதிர்பார்ப்புதான் என்னை போன்றவர்களை இந்த இடத்தில் அமர வைத்துள்ளது."
அடுத்த படத்தில் பார்க்கலாம்
"நான் ஒரு கதை எழுதுகிறேன், அது ரசிகர்களுக்குப் பிடித்தால் எனக்குச் சந்தோஷம். பிடிக்கவில்லை என்றால், அடுத்த படத்தில் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பேன்" என்று லோகேஷ் தனது இயல்பான பாணியில் பேசினார்.
மேலும், ஒரு படத்தின் வெற்றி என்பது வசூலில் இல்லை என்றும், ஒரு இயக்குனர் தனது திரைப்படத்தை வெளியிட்டாலே அது ஒரு வெற்றிதான் என்றும், லாப நஷ்டம் என்பது தயாரிப்பாளருக்கு மட்டுமே என்றும் லோகேஷ் கூறியது திரை வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் காத்திருப்பு
'விக்ரம்' படத்திற்குப் பிறகு வெளியான 'லியோ' மற்றும் 'கூலி' ஆகிய இரண்டு படங்களுமே கலவையான விமர்சனங்களைப் பெற்றதால், லோகேஷ் கனகராஜ் மீண்டும் தனது 'கைதி' மற்றும் 'விக்ரம்' பட பாணியில், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும்படி ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
லோகேஷின் அடுத்த படம் கார்த்தியின் 'கைதி 2' ஆக இருக்குமா அல்லது ரஜினி - கமல் இருவரையும் வைத்து அவர் இயக்கப் போகும் படமா என்பது குறித்த அறிவிப்புக்காக ஒட்டுமொத்த கோலிவுட்டும் காத்திருக்கிறது.
-
விஜய் சொல்லி கொடுத்து தான் ரஜினி பற்றி ஆதவ் பேசினாரு..! “அந்த” கதையை மறைக்க நடந்த சதி! பிரபலம் ஆதங்கம் -
“காக்கா குஞ்சுகளுக்கும் பதில் சொல்லும் நிலைமையா தலைவா?” ஆதவ் பேச்சுக்கு எதிராக மதுரையில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் -
விஜய் மனைவி சங்கீதாவுக்கு உங்க தோழி செய்தது சரியா? அதை ஏன் பேசல.. சின்மயியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத்












Click it and Unblock the Notifications