Rangarajan: மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாய் கிரிஸில்டா மீண்டும் புகார்.. வெளிப்படையாக வைத்த இரண்டு கோரிக்கை
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாய் கிரிஸில்டா கொடுத்த புகார் மீது ஏற்கனவே விசாரணை நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஜாய் கிரிஸில்லா மாதம்பட்டி ரங்கராஜன் மீது புகார் கொடுத்திருக்கிறார். அது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சமையல் கலைஞராகவும் நடிகராகவும் பிரபலமடைந்த மாதம்பட்டி ரங்கராஜன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக களம் இறங்கி இருந்தார். அதற்குப் பிறகு சின்னத்திரை ரசிகர்களுக்கும் பிரபலமாக இருந்தார். சோசியல் மீடியாவில் இவர் வெளியிடும் வீடியோக்கள் பெரிய அளவில் வைரலானது. சமையலில் புதுமையாக இவர் செய்வதை பலரும் ஃபாலோ பண்ண தொடங்கினர்.

அதனாலயே பல பிரபலங்களின் வீட்டில் மாதம்பட்டி ரங்கராஜனின் சமையலில் தான் தேடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஜாய் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கும் திருமண முடிந்துவிட்டது என்று போஸ்ட் போட அது பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு ஸ்ருதி என்ற வழக்கறிஞருடன் திருமணம் முடிந்து இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
ஸ்ருதியும் கணவர் மாதம்பட்டி ரங்கராஜனுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் மாதம்பட்டி ரங்கராஜனுக்கு இரண்டாவது கல்யாணம் முடிந்து விட்டதா என்று கேள்விகள் எழுந்து வந்தது. அந்த நேரத்தில் ஜாய் தான் ஆறுமாத கர்ப்பமாக இருப்பதாகவும் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கும் சில வருடங்களுக்கு முன்பே கல்யாணம் முடிந்து விட்டது என்றும் போஸ்ட் போட்டு இருந்தார்.
அதற்குப் பிறகு ஜாய், ரங்கராஜன் மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்தார். அதில் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் தனக்கு மிரட்டல் விடுவதாகவும் கூறியிருந்தார். இப்படியான சூழ்நிலையில் ஜாய்க்கு ஆண் குழந்தையும் பிறந்து இருந்தது.
அதைத்தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜன் இந்த திருமணம் எனக்கு கட்டாயத்தின் பேரில் தான் நடந்தது, ஆனால் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து அது என்னுடையது என்று நிரூபணம் ஆனால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுக்க கவனித்துக் கொள்வது என்னுடைய பொறுப்பு என்று சொல்லி இருந்தார். ஆனால் இந்த அறிவிப்பு வெளியீட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில் சோசியல் மீடியாவில் ஜாய் மாதம்பட்டி ரங்கராஜனை கிண்டல் செய்வது போலவும் கலாய்ப்பது போலவும் போஸ்ட் போட்டு கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் ஜாய், மாதம்பட்டி ரங்கராஜன் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் புகார் கொடுத்திருக்கிறார். அதில் மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாமினில் வர முடியாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் நான் குடியிருக்கும் வீட்டின் ஒப்பந்தம் வரும் பிப்ரவரி மாதத்துடன் முடிவடைய இருக்கிறது. அதனால் என்னுடைய இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள பணம் தேவைப்படுகிறது. எனவே இந்த விவாகரத்தில் விரைவில் நல்ல தீர்வை எட்ட போலீசார் உதவி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி












Click it and Unblock the Notifications