Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எரிமலையாய் வெடித்து சிதறிய மது...குரலை உயர்த்திப் பேசி மாட்டிக்கொண்ட தாமரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதுவரைக்கும் தமிழ் அதிகம் பேசத் தெரியவில்லை என்று திணறிக் கொண்டிருந்த மது தற்போது பேசியதைப் பார்த்து ரசிகர்கள் அசந்து போயிருக்கிறார்கள்.

பங்க்ஷன் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது பிரச்சனையும் பூகம்பமாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

தனக்கும் குரலை உயர்த்திப் பேச தெரியும் என்று இவர் தாமரையிடம் கூறியதை பார்த்ததும் வேற லெவல் என்ட்ரி என்று இவரை ரசிகர்கள் உசுப்பேற்றி வருகின்றனர்.

அதிகமான போட்டியாளர்கள்

அதிகமான போட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவுக்கு பஞ்சமில்லாமல் தான் ஒவ்வொரு சீசனும் இருக்கும். ஆனால் தற்போது இரண்டாவது சீசன் மட்டும் இதற்கு ஒரு மாற்றாக இருக்கும் என்று ஆரம்பத்தில் ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல இதுவும் வழக்கமாக இருக்கும் சீசன் களை போன்றதுதான் என்பது நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமான போட்டியாளர்கள் முதலில் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இதனால் பிரச்சனைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர்.

வெளிநாட்டுப் போட்டியாளர்கள்

வெளிநாட்டுப் போட்டியாளர்கள்

இதில் நடிகர்கள் மட்டுமல்லாமல் பலருக்கும் பரிச்சயமில்லாத பல மாடல் அழகிகள் வரை பலதரப்பட்ட போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர். அதிலும் ஜெர்மனி, மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இந்த சீசனில் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். இது வழக்கமாக நடப்பதாக இருந்தாலும் தற்போது ஜெர்மனியில் இருந்து இதில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகியிருக்கும் மதுமிதா விற்கும் தமிழ் ரசிகர்கள் அதிகமாக உருவாக தொடங்கிவிட்டனர்.

மதுவின் மனக்குமுறல்

மதுவின் மனக்குமுறல்

இவர் திக்கி திக்கி பேசும் தமிழ் அழகை ரசிப்பதற்காகவே இவர் ஒரு ப்ரமோ வில் வந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறிவந்தனர். கடந்த வாரம் முழுக்க இவர் இந்த வீட்டின் தலைவராக இருந்தாலும் இவருக்கு தூங்குபவர்களை கண்காணிக்கும் பணி மட்டும்தான் செய்ய முடிந்தது என்று கண்கலங்கி கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன் மனதிற்குள் இருக்கும் கோபத்தை யாரிடம் காட்டலாம் என்று எண்ணிக்கொண்டு இருந்தாரோ என்னவோ இன்றைய ப்ரமோவில் இவர் வேற லெவல் சண்டையை தொடங்கி இருக்கிறார்.

கொண்டாட்டத்திலும் பஞ்சாயத்து

கொண்டாட்டத்திலும் பஞ்சாயத்து

கிராமத்துப் பையிங்கிளியாக இந்த சீசனில் அறிமுகமாகியிருக்கும் தாமரைச்செல்வி ஒவ்வொரு நாளும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறார். இவர் மீது தப்பு இருப்பது போலவே ப்ரமோவில் காட்டி விட்டாலும் நிஜத்தில் எபிசோட்டில் அப்படி ஒன்றும் இல்லாமல் புஸ்சென்று போய்விடும். ஏற்கனவே காயின் விஷயத்தில் அப்படித்தான் நடந்தது. இந்த நேரத்தில் தற்போது இவருக்கு மதுமிதாவுக்கு பிரச்சனை முட்டி இருக்கிறது. தாமரை செல்வியை, மதுமிதா வா...போ என்று ஒருமையில் அழைத்ததாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை என்று தாமரை பேசியதற்கு அது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லை என்று மது பேசியிருக்கிறார். இவர்கள் இருவரின் பஞ்சாயத்தை பார்த்ததும் ரசிகர்கள் கொண்டாட்டம் என்று பார்த்தால் இங்கே பஞ்சாயத்துக்கு பஞ்சம் இல்லையே என்று கூறிவருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+