கோலாகலமாக நடந்த மகாநடிகை கிராண்ட் பினாலே.. டைட்டில் வென்றது யார் தெரியுமா? 2வது இடத்தில் இவங்கதான்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள் ஒவ்வொன்றிற்கும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.
அப்படியான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் மகாநடிகை. வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. தேசிய விருது பெற்ற நடிகை சரிதா, நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர் என பன்முக திறமை கொண்ட விஜய் ஆண்டனி மற்றும் பிரபல நடிகையான அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க ஆர்.ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார்.

போட்டியாளர்கள் தங்களது நடிப்பு திறமைகளை வெளிப்படுத்தும் மிகப்பெரிய மேடையாக இந்த மகாநடிகை நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் பிப்ரவரி 2-ம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற்றது. ஹேமதி, ஜாப்னா உட்பட 5 போட்டியாளர்கள் இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். ஒவ்வொரு ரவுண்டிலும் நடிப்பின் மூலமாக நடுவர்களை பார்வையாளர்களையும் பிரம்மிக்க வைத்த போட்டியாளர்கள் இறுதி போட்டியில் கடுமையாக போட்டி போட்டனர்.
போட்டியின் இறுதியில் மக்களின் ஓட்டுகள் மற்றும் நடுவர்களை மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பிடித்து டைட்டிலை வென்றார் பலரின் பேவரைட் போட்டியாளரான ஹேமதி. அவருக்கு அடுத்தப்படியாக ஜாப்னா ரன்னராக வெற்றி பெற்றுள்ளார்.

புதுமுக நடிகைக்கான தேடலாக ஒளிபரப்பாக தொடங்கிய இந்த நிகழ்ச்சிக்காக ஜீ தமிழ் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆடிஷன் நடத்தி இறுதியாக 10 போட்டியாளர்களை தேர்வு செய்து 10 பயிற்சியாளர்களை கொண்டு அவர்களுக்கு பயிற்சியும் அளித்து இந்த போட்டியை சிறப்பாக கொண்டு சென்றது பாராட்டுதலுக்குரிய ஒன்றாகும்.
மகாநடிகை நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வெகுவிரைவில் டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிகழ்ச்சியையும் ஆர்.ஜே விஜய் தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications