Malar Serial: ஏற்கனவே பாவம் மலர்...இதுல மாமனார் ஸ்டிரிக்ட் ஆஃபீசர் வேற!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் மலருக்கு ஏற்கனவே மன உளைச்சல் அதிகம். இதில் அவளின் மாமனார் ஓய்வு ராணுவ அதிகாரி. வீட்டில் இவர் ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர் வேற. இதனாலும் பாவம் மலர் கஷ்டப்படறா.

மலர் தற்காப்புக்காக கவுசிக் என்பவனை கொலை செய்துவிடுகிறாள். இது தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும். தங்கை சுவாதி அவ்வப்போது கொடுக்கும் தைரியத்தால் மலர் நார்மலாக இருக்கிறாள்.

இந்த சமயத்தில்தான் மலரை பெண் பார்க்க வந்த காவல் துறை உதவி ஆணையர் கதிருக்கு மலரை ரொம்ப பிடித்துவிடுகிறது. கட்டினால் உன்னைத்தான் கட்டுவேன்னு மலர்கிட்டேயே சொல்லிட்டு வந்துடறான்.

கதிர் மலர்

கதிர் மலர்

மலர் கதிரின் கல்யாண வேலைகள் ஆரம்பமாகுது. அவ்வப்போது கதிர் வந்து மலரைப் பார்த்து பேசுவது, வெளியில் அழைத்துப் போவது என்று இருந்தாலும், மலருக்கு கதிரை பிடித்து இருந்தாலும், தான் ஒரு கொலைகாரி என்பதால்,இந்த கல்யாணம் நடக்க கூடாது சுவாதின்னு அடிக்கடி தங்கச்சிக்கிட்டே சொல்ல்கிட்டே இருக்கிறாள் மலர். ஆனாலும், கல்யாணத்துக்கு முதல் நாள் கதிரிடம் நடந்த உண்மைகளை சொல்லிவிடலாம் என்று போகும்போது, கண்முன் தான் கைதாகும் சம்பவங்களும், அப்பா நெஞ்சை பிடித்துக் கொண்டு விழும் காட்சிகளும் வந்து போக சொல்லாமல் விட்டுட்டுடறா

முடிந்தது திருமணம்

முடிந்தது திருமணம்

கதிர் மலர் இருவருக்கும் திருமணம் நல்லபடியாக முடிந்தது. ஆனாலும், மலரின் பயம் அதிகமாக்கும்
படிதான் சம்பவங்கள் நிகழ்கிறது. முதலிரவில் மலர் நல்ல மூடில் இருக்க, கவுசிக்ன்னு ஒருத்தன் காணாமல் போன கேஸை என்கிட்டே கொடுத்து இருக்காங்கன்னு கதிர் சொல்ல, வியர்த்து விறுவிறுத்து மயங்கி விடுகிறாள் மலர். அப்போது அவளுக்குள் இன்னும் பயம் அதிகரிக்கிறது. புது மனைவியிடம் எதை பேசணும், பேசக் கூடாதுன்னு தெரியாத முட்டாளாவா இருப்பான் கதிர்?

விருந்துக்கு கமிஷனர்

விருந்துக்கு கமிஷனர்

கமிஷனர் கதிர் மலர் ஜோடியை வீட்டுக்கு விருந்துக்கு அழைத்திருக்கிறார். தங்கச்சி சுவாதி அக்காவுக்கு நிறைய தைரியம் சொல்லி.மாமா மனசு கஷ்டப்படற மாதிரி நடந்துக்காதேன்னு சொல்லி அனுப்பறா. மலரும் தற்காப்புக்காக செய்த இந்த கொலைக்கு நான் பொறுப்பு இல்லைன்னு மனசுக்குள் சொல்லிக்கிட்டு விருந்துக்கு போகிறாள். கடைசியில் அவள் கொலை செய்த கவுசிக், கமிஷனர் வீட்டு பையன். எப்படி இருக்கும் மலருக்கு?

மிளகு ரசம்

மிளகு ரசம்

விருந்துக்கு போய் வந்த அதிர்ச்சியில் இருக்கும் மலரை மிளகு ரசம் வைக்க சொல்றாங்க மாமியார். உன் மாமனார் ரசம் வைக்க சொன்னார். எனக்கு தலை சுத்துது... நான் சொல்றேன், அந்த பக்குவத்தில் ரசம் வைன்னு சொல்றாங்க அத்தை. அவளும் சொல்லிக் கொடுத்த மாதிரி, வச்சுட்டு, அதிகமா ரசத்தை கொதிக்க வச்சுடறா. மாமனார் சாப்பிட உட்கார்ந்துட்டு, மிளகு ரசம் மட்டும் போதும், வேற எதுவும் வேணாம்னு சொல்றார். ரசத்தை ஊற்றியதும் வாயில் வச்சுட்டு, யார் ரசம் வச்சதுன்னு கேட்க, எனக்கு உடம்பு சரியில்லை மலர்தான் வச்சான்னு சொல்ல, எழுந்துடறார்.

உடம்பு சரியில்லேன்னா என்கிட்டே சொல்லணும் என்று மனைவியிடமும், எதை செய்தாலும் சரியா செய்யணும் என்று மருமகள் மலரிடமும் சொல்லிட்டு கிளம்பிடறார்.

திரும்பின பக்கம் எல்லாம் பிரச்சனை என்றால், மலர் என்னதான் செய்வாள் பாவம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+