Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Malar serial: என்ன கொடுமை கண்ணீர் விடாத நாட்களே மலருக்கு இல்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் மலர் சீரியலில் மலர் தற்காப்புக்காக ஒரு கொலையை செய்துவிட்டு, கடந்த மூன்று வருடங்களில் ஆரம்பித்து இன்று வரை தினம் தினம் என்று அவள் கண்ணீர் விடாத நாட்கள் இல்லை.

இந்த விஷயம் தங்கை சுவாதிக்கு மட்டுமே தெரியும் என்பதால்,அவள்தான் அவ்வப்போது மலருக்கு ஆதரவாக பேசி, அவளை சிரிக்க வைப்பது .சகஜமாக்கி விடுவது என்று பாசக்கார தங்கையாக இருக்கிறாள்.

இந்த நேரத்தில் கல்யாணம்கூடி வருகிறது மலருக்கு.அதுவும் அசிஸ்டென்ட் கமிஷனர் மாப்பிள்ளை. எப்படி இருக்கும் அவளுக்கு? கடவுளே மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்க கூடாதுன்னு வேண்டிக்கறா...ஆனா,காட்டினா உன்னைத்தான் கட்டுவேன்னு சொல்றான் மாப்பிள்ளை கதிர்.

முடிந்தது திருமணம்

முடிந்தது திருமணம்

ஒரு வழியாக நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பது போல.மலர் கல்யாணம் கிட்டே நெருங்குதே நெருங்குதே என்று கவலையில் இருக்க, கதிருடன் கல்யாணமும் முடிந்து விட்டது. சரி இனிமேலாவது அசிஸ்டென்ட் கமிஷனர் கதிரின் விருப்பப்படி, அவன் தன் மீது வைத்திருக்கும் காதலை எண்ணி,அவனுடன் மகிழ்வுடன் வாழலாம் என்று ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் மலர்.

இபோதுதானா சொல்வது?

இபோதுதானா சொல்வது?

மலர் முதலிரவில் கதிரிடம் ஐ லவ் யூ சொல்லிடலாம். இது எனக்கான வாழ்க்கை. எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் ஒடி ஒளியாமல் எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்தத்தான் வேண்டும் என்று மனசுக்குள் சங்கல்பம் செய்து மன திடத்துடன் இருக்கிறாள். படுக்கை அறைக்கு வந்த கதிர், அவளை வர்ணித்து அவளை மூடாக்கி, கடைசியில் போட்டான் ஒரு போடு.

மனைவியாக வந்த நேரம்

மனைவியாக வந்த நேரம்

நீ மனைவியாக வந்த நேரம், எனக்கு ஒரு கேஸ் கொடுத்து இருக்கார் கமிஷனர். கவுசிக்னு ஒருத்தனை யாரோ கொலை செத்துட்டாங்க. அந்த கேஸை என்னிடம் குடுத்து இருக்கார்னு சொல்வானா? அந்த கொலையை செய்தவளே மலர்தான், வியர்த்து விறுவிறுத்து மயங்கி விழுந்துடறா. இப்படி தினம் தினம் அழ நல்ல காரணம் கிடைச்சுருது.

கவுசிக் நண்பன்

கவுசிக் நண்பன்

கதிர் கவுசிக்கின் உயிர் நண்பனை கண்டுபுடித்து, அவனிடம் விசாரிக்க எனக்கு எதுவும் தெரியாது சார். அவன் கமிஷனர் பையன், பணக்காரன். பணம் வேணும்னா அவனிடம் கேட்பேன் அவ்ளோதான்னு சொல்லிடறான் .ஆனால், மலர் சாலையில் நடந்துகொண்டு சென்று இருக்கும்போது, இவள் கவுசிக் காதலிச்ச பொண்ணாச்சேன்னு கண்டுபிடிச்சுடறான்.

இவனுக்கு இருக்கும் கடன் தொல்லையில், அவளை பணம் கேட்டு டார்ச்சர் செய்ய ஆரம்பிக்கிறான். இப்படி மலர் அழாத நாளே இல்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+