வகிட்டில் பொட்டு வச்சுக்கறாங்க.. ஆனா நெத்தியில இல்லையே...!
சென்னை: சீரியல்களில் மாடர்ன் பொண்ணுங்க திருமணம் ஆகிவிட்டால் வகிட்டில் பொட்டு வச்சுக்கறது வழக்கமா இருக்கு.. ஆனால் பாரம்பரியப்படி நெற்றியில் பொட்டு வச்சுக்கறது இல்லை.
இதையே நிஜ வாழ்க்கையிலும் பெண்கள் உடைகளுக்கு ஏற்ப கடைப்பிடித்து வருகிறார்கள். ஜீன்ஸ் போன்ற உடை அணியும் போது திருமணம் ஆன பெண்கள் வகிட்டில் மட்டும் குங்குமம் வச்சுக்கறது...
இப்படி உல்டாவாக, நெற்றியில் பொட்டு இல்லாமல் இருப்பது என்று.. என்ன காரணம்?

மாடர்ன் லுக்
ஜீன்ஸ் போன்ற அல்ட்ரா மாடர்ன் உடைகள் அணியும்போது நெற்றியில் பொட்டு வச்சா மாடர்ன் லுக் இருக்காது என்கிறார்கள். திருமணம் ஆன பெண் என்பதை காண்பித்து கொள்ளத்தான் வகிட்டில் பொட்டு வச்சுக்கறதா சொல்றாங்க. ஆனால்,காலில் அணிந்து இருக்கும் மெட்டியை கழட்டுவதில்லை,. கழுத்தில் போட்டு இருக்கும் தாலியை கழட்டுவதில்லை. இதுவும் அடையாளம்தானே...

நெற்றியில் திலகம்
வீட்டில் பெரியவர்கள் திருமணம் ஆன பெண்கள் குளித்து விட்டு வந்தவுடனே நெற்றியில் திலகம் வை திலகம் வை என்று அவசர படுத்துவார்கள். ஒரு நிமிடம் கூட நெற்றியில் பொட்டு இல்லாமல் இருக்க கூடாது என்று சொல்வார்களே.. அப்படி என்றால் திருமணம் ஆன பெண்கள் நெற்றியில் பொட்டு இல்லாமல் இருப்பது தப்பு என்றுதானே அர்த்தம்?

புடவை அணிந்தால்
புடவை உடுத்தினால் அழகாய் பொட்டு வைத்து, வகிட்டில் குங்குமம் வைத்து, தலை நிறைய பூ வைத்து கை நிறைய வளையல் போட்டு அலங்காரம் பண்ணிக்கொண்டு நிற்கிறார்கள். பணிவாக நடந்துக் கொள்கிறார்கள். இதிலும் சீரியல் ஆதிக்கம் தெரிகிறது.

காண்பித்தால்
எந்த சீரியலிலாவது ஒரு முதிய பெண்மணி இருந்து, நெற்றியில் திலகம் இல்லாமல் இருப்பது தவறு என்று சுட்டிக் காட்டி அதை ஒளிபரப்பினால் அப்போது நமது பெண்கள் அதை தவறாமல் கடைப்பிடிப்பார்களா? நல்லது எப்படியாவது நடந்தால் சரி எனும் பட்சத்தில் எந்த சீரியலிலாவது அதை காண்பிக்கட்டும். எப்படியோ... பொட்டு வச்சாலும் வைக்காவிட்டாலும் சரி.. புருஷனை மதிச்சா போதும்ய்யா!












Click it and Unblock the Notifications