Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் சிங்கர்..வென்றார் மூக்குத்தி முருகன்.. அனிருத் இசையில் பாட வாய்ப்பு.. ரூ. 50 லட்சத்தில் வீடு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Super singer Title Winner: மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்

    சென்னை: விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் கிராண்ட் ஃபினாலேயில் முதல் இடத்தைப் பிடித்த மூக்குத்தி முருகனுக்கு அனிருத் இசையில் பாட அருமையான வாய்ப்பு கிடைச்சு இருக்கு. கூடவே ரூ. 50 லட்சம் மதிப்பிலான வீடும் பரிசாக கிடைத்துள்ளது.

    விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் கிராண்ட் ஃபினாலே நிகழ்சசி கோயம்புத்தூரில் நடைபெற்றது. இந்த இறுதி நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டிருந்தனர். நேரலையாக இது ஒளிபரப்பு செய்யப்பட்டது.

    பிற்பகல் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி மிக சுவாரஸ்யத்துடன் நேரம் போவது தெரியாமல் சென்றுகொண்டு இருந்தது.போட்டியாளர்கள் முதல் சுற்று இரண்டாவது சுற்று என்று பாடல்களை தேர்வு செய்து பாடினர்.

    தலையாய பாட்டாக

    தலையாய பாட்டாக

    அனிருத் இசையில் அவரே தல அஜீத்துக்கு பாடிய ஆலுமா டோலுமா பாடலை பாடி அசத்தினார். அரங்கமே அதிரும்படி மேல் நோக்கியே ஒன் டூ .த்ரீ,ஃபோர் என்று நான்கு ஸ்டெப்ஸ் ரசிகர்களை போட சொல்லி ஆலுமா டோலுமா பாடலை பாடினர். அரங்கமே அதிரும் படியான ரசிகர்களின் கூச்சல் அனிருத் எனர்ஜி லெவலை கூட்டுவதாக இருந்தது.

    ஐவர் இறுதிப் போட்டிக்கு

    ஐவர் இறுதிப் போட்டிக்கு

    இறுதிப் போட்டியில் சாம் விஷால், கெளதம், புன்யா, மூக்குத்தி முருகன், புன்யா ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் தலா 2 பாடல்களை இறுதிப் போட்டியில் பாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

    எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

    எங்கே நிம்மதி எங்கே நிம்மதி

    மூக்குத்தி முருகன் எங்கே நிம்மதி பாடலை தனது முதல் சுற்றிப் பாடி அத்தனே பேரையும் மிரள வைத்தார். அடுத்த சுற்றில் இவர் பாடியது பில்லா படத்தில் வந்த வெத்தலையைப் போட்டேண்டி... மற்றவர்களும் போட்டிப் போட்டு பாடி அனைவரையும் அதிர வைத்தனர்.

    மூக்குத்தி முருகன் வெற்றி

    மூக்குத்தி முருகன் வெற்றி

    இறுதியில் மூக்குத்தி முருகனுக்கே பட்டம் கிடைத்தது. முதல் பரிசு தட்டிச் சென்ற முருகனுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான வீடு பரிசாக கிடைத்தது. கூடவே அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. எளிய கலைஞனான இவருக்கு பரிசு கிடைத்ததில் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

    ஷ்யாம் புண்யா

    ஷ்யாம் புண்யா

    முதல் ரன்னர் அப் பரிசு சாம், புன்யா இருவருக்கும் கிடைத்தது. யாழ்ப்பாணத்தைப் பூர்வீமாகக் கொண்ட புன்யா, லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் தமிழர். முதலில் சங்கீதம் கற்றுக்கொண்டு. இதில் ஒன்றும் தேற முடியாது என்று, டாக்டருக்குப் படித்தவர். பின்னர் இப்போது ஏன் திரும்ப மியூசிக்கை கையில் எடுக்கக் கூடாது என்று நினைத்த கையில் எடுத்த நேரம் ரொம்ப நல்ல நேரமாக அமைந்து சூப்பர் சிங்கரில் வாய்ப்பு கிடைத்து இரண்டாம் இடத்தைப் பிடித்தும் சாதித்து இருக்கார். விக்ரம், கெளதமுக்கு 2வது ரன்னர் அப் பரிசு கிடைத்தது.

    எளிமையான பாடகர்

    மூக்குத்தி முருகன் கேள்வி ஞானத்தில்தான் விஜய் சூப்பர் சிங்கரில் கலந்துக் கொண்டார். உண்மையில் இவர் ஒரு வரை பட கலைஞர். குறிப்பாக சுவற்றில் அரசியல்வாதிகள், பிரபலங்களை வரைவதில் வல்லவர். இவர் இந்த சீசன் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் என்டெர்டெயினராகவும் இருந்து நிகழ்ச்சியைப் பார்க்க வைத்த பெருமைக்கு உரியவர்.

    முகேன் பிக்பாஸ்

    இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் 3 வின்னர் முகேனும் சிறப்பு அழைப்பாளராக வந்து பாடல் பாடினார். ராஜலட்சுமி செந்தில் நாட்டுப்புற கலைஞரின் பாடலும் இருந்தது. மொத்தத்தில் சூப்பர் சிங்கர் கிராண்ட் ஃபினாலே செம என்டெர்டெயின்மென்ட்! வழக்கமான இழுவை இல்லாமல், ஜாலியாக போனது இன்னொரு ஹைலைட்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+