என்னை ஏமாற்றி கல்யாணம் செய்துகிட்டாரு! ஒரு வருஷத்துல நாஞ்சில் விஜயன் மனைவி பரபரப்பு "புகார்"
சென்னை: என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்துக் கொண்டார் என கணவர் நாஞ்சில் விஜயன் மீது அவருடைய மனைவி மரியா ஒரு பேட்டியில் குற்றம்சாட்டியது வைரலாகி வருகிறது. சமூகவலைதளங்களிலும் "என்ன புரோ இப்படிஎல்லாம் ஏமாற்றலாமா" என கேள்வி எழுப்பப்படுகிறது.
விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன். இவர் அது இது எது, கலக்க போவது யாரு, சிரிச்சா போச்சு போன்ற நிகழ்ச்சிகளில் காமெடி செய்து கலக்கியவர். பெரும்பாலும் பெண் வேடம் போட்டு நடித்து நடிப்பார். மிகவும் நேர்த்தியாக இருக்கும்.

இவர் லாக்டவுன் நேரத்தில் யூடியூப் சேனலை தொடங்கினார். அந்த சேனலுக்கு யூடியூபர் சூர்யா தேவியை பேட்டி எடுத்த போது வனிதா விஜயகுமார்- பீட்டர் பால் திருமணம் குறித்து தகாத வார்த்தைகளால் பேசியிருந்தார். இதையடுத்து வனிதா விஜயகுமார் சூர்யா தேவி, நாஞ்சில் விஜயன் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்தார்.
மேலும் சூர்யா தேவி கஞ்சா வியாபாரி என்றும் நாஞ்சில் விஜயனுடன் அந்த பெண் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் வனிதா விஜயகுமார். இதையடுத்து சூர்யாதேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் இருவருக்கும் இடையே அடிதடி வரை போனது. இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டு சூர்யாதேவியை அவதூறாக பேசி மிரட்டி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் 2022 ஆம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸார் நாஞ்சில் விஜயனை கைது செய்தனர்.
அண்மையில் கூட ஐபிஎல் டிக்கெட் விவகாரத்தில் நாஞ்சில் விஜயன் சிக்கினார். பிரபல நடிகை ஒருவருடன் சேர்ந்து 1500 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை பிளாக்கில் 6000, 7000 என பெரிய தொகைக்கு விற்பனை செய்ததாக புகார்கள் எழுந்தன. அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிய நாஞ்சில் விஜயன் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வெற்றி நடை போட்ட வள்ளித் திருமணம் என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நாஞ்சில் விஜயன்.
இந்த நிலையில் இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு 10 மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. இவர் தனது நண்பர்கள் மூலம் அறிமுகமான மரியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் நாஞ்சில் விஜயனும் மரியாவும் ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில் மரியா, இவர் என்னை ஏமாற்றிதான் திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்தின்போது எங்களிடம் அவரது வயதையே சொல்லவில்லை. ஆனால் இவருக்கு இப்போ அங்கிள் வயசு இருக்கும். என்னை பெண் பார்க்க வந்த போது கூட இவர் தலை, மீசை, எல்லாம் வெள்ளையாகவே இருந்தது.
கல்யாணத்திற்கு பிறகு ஒரு நாள் இவருக்கு எண்ணெய் தேய்த்து விட்டேன். அப்போதுதான் சாயம் வெளுத்தது (சிரிக்கிறார்). தலை பூரா வெள்ளை முடிதான் என்று தனது கணவர் பற்றி நகைச்சுவையாக கூறியிருந்தார். அதற்கு நாஞ்சில் நான் ஏமாற்றி எல்லாம் கல்யாணம் செய்யலை. என்னோட வயசையும் நான் மறைக்கவில்லை, இந்த வெள்ளை முடிக்கு மட்டும்தான் டை அடித்துவிட்டேன் என்றார். இவர் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக அறிமுகமான நாஞ்சில் விஜயன் ஒரே வாரத்தில் தான் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications