குழந்தையை குடுத்துட்டு குழந்தை மாதிரி தூங்கறானே!
சென்னை: சன் டிவியின் நாயகி சீரியலில் ஆனந்தி எல்லா சொத்துக்கும் வாரிசு என்றாலும், உண்மை தெரியாத நிலையில் ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கா.
திரு கூட காதல் கல்யாணம் செய்து, வயித்துல குழந்தையும் உருவான நிலையில, திருவுக்கு மண்டையில அடிபட்டு கடந்த 5 வருஷத்து நினைவு இல்லாம போயிருது.
இதை காரணம் காமிச்சு, பணக்கார நண்பர் துரையின் பொண்ணு அனன்யாவை கல்யாணம் செய்து வச்சுடலாம்.. ஆனந்தியை தீர்த்து கட்டலாம்னு முடிவு செய்து திருவோட அப்பாவும், நண்பர் குடும்பமும் சதி வேலையை செய்யறாங்க.
ஏங்க.. .விஸ்வாசம் படத்துல கட்டிப் பிடிக்க கோட் வோர்ட் மாதிரி நாமளும்... வேற பேசிக்கலாமா!
கடைசியில திரு வீட்டுக்கே திருவோட கெஸ்ட்டா ஆனந்தி வந்து தங்கற மாதிரி சூழ்நிலை உருவாகுது. ஆனந்தி சந்தோஷமா இருக்கா.திரு அம்மாவும் சந்தோஷமா இருக்காங்க.
ஆனந்தி தங்கள் குடும்ப வாரிசை சுமப்பது திருவோட அம்மாவுக்கு சந்தோஷமா இருந்தாலும், அவன் நினைவில் இல்லாத போது, இதை யாரிடம் சொல்றதுன்னு சொல்லாம இருக்காங்க.
திரு போரடிக்குதுன்னு வெளியில போறேன்னு சொல்றான். உனக்கு வழி தெரியாது..தனியா போகாதப்பான்னு அம்மா சொல்ல, ஆனந்தியை அழைச்சுக்கிட்டு போறேன்மான்னு திரு சொல்ல, இருவருக்கும் சந்தோசம்.
வழியில ஆனந்தி வாமிட் எடுக்க, ஆஸ்பத்திரிக்கு போயி ஆகணும்னு திரு அடம் புடிக்கறான்.சரின்னு ஆஸ்பத்திரிக்கு போக, அங்க மாமியாருக்கு எஸ்.எம்.எஸ் பண்றா ஆனந்தி. அவங்களும் வந்துட ஒரு வழியா ஆனந்தி தப்பிச்சுக்கறா.
வீட்டுக்கு வந்த உடனே, திரு அம்மா தலை வலிக்குது.. எனக்கு தைலம் தேய்ச்சு விடுங்கன்னு சொல்றான். திரு நீ மேல உன் ரூம்ல இரு.. நான் ஆனந்தியை அனுப்பி வைக்கறேன்னு சொல்றாங்க.
ஆனந்தியை திருவின் ரூமில் விட்டு, ஆனந்தி இதமா, பதமா தைலத்தை தேய்ச்சு விட்டுட்டு. திரு தூங்கி எழுந்தா சரியாகிடும்னு சொல்றாங்க. அவங்க போயிட, ஆனந்தி திருவுக்கு தைலம் தேய்க்க தேய்க்க அவன் தூங்கிடறான்.
தூக்கத்தில் புரண்டு படுத்தவன், ஆனந்தியின் மடியில படுத்துக்கறான். பாவம் ஆனந்தி அப்போதுதான் மனம் திறந்து பேசறா.என் வயித்துல உங்க குழந்தை வளருது திரு. நீங்க குழந்தை மாதிரி என் மடியில் தூங்கறீங்க.
உருகி உருகி காதலிச்சு கல்யாணம் செய்துகொட்டோம்.. உங்களுக்கு எதுவுமே நினைவுல இல்லியே திரு. என் வயித்துல இருக்கும் குழந்தை இப்போதுதான் கருவா இருக்கு. இருந்தாலும் தொட்டு பாருங்க திரு.. அப்பான்னு உங்களை புரிஞ்சுக்கும்னு கண்ணீரோடு பேசறா.
திருவின் கையை எடுத்து, தன் வயிற்றில் வச்சு கண்ணீர் வடிக்கறா. மனம் உருகும் காட்சியா இது இருந்துச்சு.