நீயா நானாவில் கோபிநாத் முன்பே வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள்.. குழந்தைகள் வைத்து நடந்த பிரச்சனை
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் 18ஆம் தேதிக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் குழந்தை பிறந்த பிறகு வாழ்க்கை ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டது என்று ஒருத்தரப்பினரும், இன்றைய தாய்மார்கள் சின்ன பிரச்சினையை பெரிதாக பேசுகிறார்கள் என்று இன்னொரு தரப்பினரும் வாதிடுகின்றனர். அப்போது குழந்தைகள் குறித்து இரண்டு தரப்பினருக்கும் கோபிநாத் முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த ப்ரோமோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் டிவியில் ஒரு சில நிகழ்ச்சிகள் காலம் கடந்தும் ரசிகர்கள் மனதில் பசை போல ஒட்டி இருக்கிறது. அதிலும் விஜய் டிவிக்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்த நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை சொல்லவே வேண்டாம். இந்த நிகழ்ச்சி 10 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கோபிநாத் மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார். இதுவும் இந்த நிகழ்ச்சியின் பெரிய பிளஸ் பாயிண்டாக இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து விவாதம் நடைபெறுகிறது. அதனால் இங்கே விவாதங்களும் வாக்குவாதங்களும் பல வெடிக்கிறது. அதே நேரத்தில் கோபிநாத் இரண்டு தரப்பினர்களின் கருத்துக்களை கேட்டு மக்களின் குரலோடு இவரும் தனித்துவமான கருத்துக்களை சொல்லி பலரையும் வியக்க வைத்து கொண்டு இருக்கிறார்.
அதே நேரத்தில் இந்த நிகழ்ச்சியில் சிலர் எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலமும் அடைந்து விடுகிறார்கள். ஒரு சில தலைப்புகளில் விவாதம் நடைபெறும் போது அந்த தலைப்புகள் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அந்த வகையில் இந்த வாரம் குழந்தை பிறந்த பிறகு பெண்களின் தினசரி வாழ்க்கை டென்ஷன் மிகுந்ததாக மாறி உள்ளது என்று இளம் தாய்மார்களும், அதை மறுத்து... அப்படி இல்லவே இல்லை இப்போதுள்ள பெண்கள் சின்ன பிரச்சனையையும் பெரிதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தங்களுடைய அனுபவத்தை பகிரும் தலைமுறையினர்களும் விவாதிக்கிறார்கள்.
அதில் பல பெண்கள் குழந்தைகள் வளர்ப்பில் தாங்கள் படும் கஷ்டங்கள் குறித்து சொல்லிக் கொண்டிருக்கையில் இன்றைய தாய்மார்கள் சாதாரண விஷயத்தை பெரிதாக்குகிறார்கள் என்ற அணியில் இருந்து ஒரு பெண் நான் என்னுடைய மகனை ஒன்றரை வருஷமா என் கூடவே வைத்து வளர்த்துட்டு வரேன்.

நான் கிச்சனில் எந்தெந்த பொருட்களை தொடக்கூடாது என்று அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறேன். அவன் தொடவே மாட்டான் என்று சொல்ல, அதற்கு எதிர்தரப்பில் குழந்தைகள் பிறந்த பிறகு வாழ்க்கை டென்ஷன் ஆகிறது என்று சொல்லும் அருகில் இருந்த ஒரு பெண் ஆவேசமாக கேள்வி கேட்டு இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், எங்க சொந்தக்காரங்களிலேயே நிறைய குழந்தைகள் பாலை எல்லாம் எடுத்து கொட்டிக்குவாங்க, குக்கரில் கை வைத்த கேஸ் எல்லாம் இருக்கு... அதனால் குழந்தைகளை எக்காரணம் கொண்டும் கிச்சனுக்குள் அனுமதிக்கவே கூடாது. நாம் பக்கத்தில் இருக்கும்போது அவர்களிடம் சொல்லும்போது எல்லாம் சரியாக இருக்கும் ஆனால் நாம் இல்லாத நேரத்தில் அந்த குழந்தைகள் அதில் என்னதான் இருக்கிறது என்று ஆராய்ந்து பார்க்க தொடங்கும் அப்போது ஆபத்து ஏற்படுகிறது.
இது நான் என்னுடைய குழந்தைகளுக்காக மட்டுமல்ல எல்லா குழந்தைகளுக்காகவும் தான் பேசுகிறேன் என்று கோபமாக பேசுகிறார். அதோடு யாராவது என்னோடு விவாதம் பண்ணுறதா இருந்தா பண்ணுங்க என்று அவர் சவால் விடும் தொனியில் பேச அப்போது கோபிநாத் அமைதியாக இருக்கிறார். இந்த ப்ரோமோ இப்போது இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
விஜய் டிவியில் மீண்டும் சேரும் பாக்கியலட்சுமி கோபி பாக்கியா.. ஹீரோ யாரு தெரியுமா? பிக் பாஸ் பிரபலம் ஹேப்பி -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications