Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பணம் இருந்தா இப்படி பேசலாமா? அதுவும் மருந்து விஷயத்தில்.. நீயா நானா பிரபலத்தால் கோபத்தில் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

இந்த வார எபிசோட்டில் வரவுக்கு மீறி செலவு அதிகரிப்பதற்கு காரணம் தனிநபரின் வீண் செலவுகளா? அல்லது விலையற்ற சூழலா? என்ற விவாதம் நடைபெறுகிறது.

Neeya Naana show 13th August 2023 promo 3 and fans reaction

அதில் மருத்துவ செலவுகளை மக்கள் எதிர்கொள்வதற்கு எத்தனையோ சீப்பான மாத்திரைகள் வந்துவிட்டது என்று பேசியிருக்கிறார். இந்த நிலையில் இந்த வார்த்தை இப்போது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

சமூகத்தில் தற்போது நிலவும் விலைவாசி உயர்வு காரணமாக ஏழைகளும் நடுத்தர வர்க்கத்தினரும் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அடிப்படை தேவை பொருட்களை கூட வாங்குவதற்கு முடியவில்லை. போன வாரம் பத்து ரூபாய்க்கு வாங்கிய பொருள் கூட இன்று 100 ரூபாயை தாண்டி விட்டது.

ஆனால் வருமானம் இன்னும் அதே நிலையில் தான் இருக்கிறது. பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கின்றனர். அதே நேரத்தில் ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கின்றனர். தொடரும் விலையற்றம் காரணமாக தனிநபர் எப்படி அதை எதிர்கொள்வது என்பது விதமான இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் விவாதிக்கப்படுகிறது.

Neeya Naana show 13th August 2023 promo 3 and fans reaction

இந்த நிலையில் இந்த வார நீயா நானா நிகழ்ச்சிக்கு வரவு எட்டணா செலவு பத்தணா ஆகுவதற்கு என்ன காரணம் அதற்கு தனிநபரின் செலவுகளா? அல்லது விலை ஏற்ற சூழலா? என்று விவாதிக்கப்படுகிறது. அந்த எபிசோடிற்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ஒரு பெண் எங்களுக்கு நூறு ரூபாய் வருமானம் வருதுன்னா. அதுக்கு அதில் 105 ரூபாயாக செலவு தான் வருது சார் என்று சொல்கிறார்.

அதற்கு எதிரணியில் இருக்கும் நபர் நீங்க 100 ரூபாய்க்கு உள்ள வாழ பழகிக்கணும் என்று சொல்கிறார். அதற்கு இன்னொரு நபர் அடிப்படை தேவையான மருத்துவ செலவிருக்கு என்ன மாற்று வழி இருக்கிறது என்று கேள்வி கேட்க, அதற்கு ஏற்கனவே பதில் சொன்ன நபர் சீப்பான மெடிசின் எல்லாம் இப்போ ஸ்டார்ட் பண்ணி இருக்காங்க அதை பயன்படுத்திக் கொள்ளனும் என்று கூறியிருக்கிறார்.

Neeya Naana show 13th August 2023 promo 3 and fans reaction

இந்த நபரின் கருத்தை கேட்ட கோபிநாத் அரங்கத்தில் இருந்தவரிடம் இந்த நபரின் கருத்தை நீங்க எந்த மாதிரி பாக்குறீங்க என்று கேட்கிறார். அதற்கு இன்னொரு நபர் இது மேல் தட்டு வர்க்கத்தினுடைய பார்வை தான் என்று கூறுகிறார். இப்படியாக வெளியாகி இருக்கும் ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் இவர்களைப் போன்ற மேல் தட்டு வர்க்கத்தினரால்தான் ஏழைகள் இன்னும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். அதோடு இவரை பார்க்கும்போது ஆம்பள நிர்மலா சீதாராமன் மாதிரி இருக்கிறது என்றும் கருத்துக்கள் குவிகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+