நிலாவும் நீலாம்பரியும் என்ன பேசினாங்க... நோ ஆப்ஷன்.. ஒன்லி எஸ்னு சொல்றாங்களே!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவை பொண்ணு பார்க்க நீலாம்பரி மகன் சஞ்சயை அழைச்சுக்கிட்டு வர்றாங்க. நிலாதான் கார்த்திக்கை லவ் பண்றாளேன்னு பார்த்தா, நிலா சம்மதம் சொல்லிடறா..
முதலில் ஏற்கனவே தான் சந்தித்த நீலாம்பரியை பார்த்து நிலா அதிர்ச்சியாகறா .. நிலாவோட அபிப்ராயத்தையும் கேளுங்கன்னு நிலாவின் அப்பா பொண்ணை பத்தின கவலையில சொல்றார்.
முற்றத்துல ரோஜா பூ... தூணில் மல்லிகை பூ.. ஆகாயத்தில் நட்சத்திரம்... கீழ நம்ம மூச்சு காத்து!
அதுக்குள்ளே சஞ்சய் தனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கும்மான்னு சொல்றான். நிலாவின் தங்கச்சி ஸ்வேதா, முகம் வாடி அதிர்ச்சியாகறா.. சஞ்சய் கண்டுக்கலை.
நிலா தான் மாப்பிள்ளையோட இல்லை, ஆன்ட்டியோட பேசணும்னு சொல்றா...சரின்னு நீலாம்பரியும் செல்ல, இருவரும் பேசுகிறார்கள். நிலா நீதான் பொண்ணுன்னு எனக்கு தெரியாமத்தான் பொண்ணு பார்க்க வந்தேன்னு நீலாம்பரி பொய் சொல்றாங்க.
தான் கார்த்திக்கை காதலிக்கும் விஷயத்தையும் நிலா சொல்றா. நீங்க ரொம்ப நல்லவங்க ஆன்ட்டி.. ஆனா, எனக்குத்தான் உங்க வீட்டுக்கு மருமகளா வர குடுத்து வைக்கலேன்னு சொல்றா.
ஆனா, அதுக்கப்புறம் என்ன பேசினாங்களோ... வெளியில வந்த நிலா, இந்த கல்யாணத்துல எனக்கு முழு சம்மதம்னு சொல்றா. நிலாவின் அப்பா அதிர்ச்சியாகறார்.
நிலாவின் அம்மாவும், மாமாவும் நீலாம்பரியிடம் என்ன சொல்லி நிலா மனசை மாத்துனீங்கன்னு கேட்கறாங்க. நான் பிசினெஸ் பண்றவ... நான் முடிவெடுத்துட்டா எஸ், நோ ஆப்ஷன்ஸ் கிடையாது. ஒன்லி எஸ்தான்னு சொல்லிட்டு கிளம்பறாங்க.
துப்பட்டா துப்பட்டான்னு நிலா தங்கச்சி பின்னால சுத்தினை சஞ்சய் ரொம்ப அலட்சியமா கிளம்பறான். என்ன நடக்க போகுதோ...