Nila serial: ஆடி வெள்ளி அன்று அன்வர் அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையல்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் வைத்தியர் ஆஸ்ரமத்தில் அஞ்சலிக்கு துணையாக இருந்த ரேவதிக்கு அம்மை போட்டுவிடுகிறது. ஆத்தா ரொம்ப ஆங்காரமா இறங்கி இருக்கான்னு எல்லாரும் பேசிக்கறாங்க.
ரேவதி கண் விழிக்க முடியாமல் தவித்து படுத்து இருக்காங்க. அதே ஆஸ்ரமத்தில் வைத்தியர் அன்வராக இருப்பவர்தான் ரேவதியின் கணவர் ஸ்ரீதர். ஆனால், அவருக்கு பழைய நினைவுகள் எல்லாம் மறந்து போய் விடுகிறது.
நினைவில்லாமல் இருந்தபோது அவரை இஸ்லாமிய பெரியவர் ஒருவர் காப்பாற்றி அன்வர்னு பேர் வச்சு வைத்தியம் கத்து கொடுத்து இருக்கார்.அந்த வைத்தியத்தைத்தான் இப்போது ஆஸ்ரமத்தில் அன்வர் செய்துகொண்டு இருக்கார்.

அன்வர் அஞ்சலி
அன்வர்தான் அஞ்சலிக்கு வைத்தியம் பார்த்து வருகிறார் என்றாலும்,, ரேவதி ஒரு நாள் கூட அவரை நேரில் பார்க்கவில்லை. இதனால்தான் அன்வர் தன் கணவர் என்கிற உண்மை தெரியாமல் போகிறது. இப்போது, ஆத்தா இன்னும் இறங்கவில்லை என்று எல்லோரும் சொல்ல, நான் வந்து அவங்களைப் பார்த்து ஓதலாமான்னு கேட்கிறார். அந்த பெண்கள் தயங்குகிறார்கள்.

எதுக்கு தயக்கம்
உங்கள் தயக்கம் எனக்கு புரியுது. அல்லாவா இருந்தால் என்ன,அம்மனா இருந்தால் என்ன... நல்லது நடக்கணும்னு அவங்கவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி வேண்டிக்கறோம் அவ்ளோதான். இதுக்கு எதுக்கும்மா யோசிக்கறீங்கன்னு கேட்கிறார் அன்வர். ஆஸ்ரம காப்பாளரும் வழி விடுங்கம்மா.. அவர் மன திருப்திக்கு அவர் வேண்டிக்கறார்னு சொல்ல, இவர் ரேவதியைப் பார்க்கப் போறார்.

அன்வர் ரேவதி
அன்வர் ரேவதியைப் பார்த்து ஒரு சலனமும் இல்லாமல் ஓதிவிட்டு போகிறார். ரேவதி யாரு யாரு எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் என் அருகிலிருப்பது போல இருக்குதேன்னு புலம்பறாங்க. இங்கே அஞ்சலிக்கு வைத்தியம் பார்க்கும் அன்வர் உங்களுக்காக வேண்டிக்க வந்திருக்கார்னு சொல்றாங்க. அதே மாதிரி ஓதிவிட்டு போயிடறார் அன்வர்.

கூழ் காய்ச்சி
அன்வர் ரேவதி குணமடைய வேண்டிக்கிட்டு, மூன்று தண்ணீர் விட்டதும், அம்மனுக்கு தனது கையால் கூழ் காய்ச்சுகிறார்.அதை அம்மனிடம் வைத்து பூஜை செய்து, பிறகு ரேவதிக்கு கொடுக்க சொல்கிறார்.ரேவதி கணவர் செய்த கூழ்னு தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, வெளியில் கூழ் பானையை வைத்து அன்வர் மக்களுக்கு கூழ் ஊத்தி கொடுத்து வருகிறார்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications