Nila serial: வெள்ளைக் குதிரையிலே ஐயா ஓடி வர்றார் முனீஸ்வரர்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவுக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடந்து வருது. முனீஸ்வரர் கோயிலில் இந்த சடங்குக்கு நீலாம்பரி ஏற்பாடு செய்யறாங்க. பெண்கள் கூட்டம் கூடி இருக்க, அசோக்கின் அருகில் நிலா உட்கார இந்த சடங்குக்கு நடக்குது.
ஆடி மாசம் என்றாலே கூழ் ஊற்றும் சடங்கு போல, புது மணமகளுக்கு தாலி பிரிச்சு கோர்க்கும் சடங்கும் நடப்பது வழக்கம். அதை நிலா சீரியலில் காண்பித்து இருக்கிறார்கள்.
இந்த கோயிலில் வைத்து நிலாவை சாகடிக்க நீலாம்பரியின் மகன் சஞ்சய் திட்டம் போடறான். அதே போல அலுவலகத்தில் நிலாவால் பாதிக்கப்பட்ட ஒருத்தரை வைத்து முனீஸ்வரன் கோயிலில் சாமியாடியை தூண்டிவிட்டு, கொலை செய்ய ஏற்பாடு செய்யறான்.

அசோக் நிலா
அசோக்கை கல்யாணம் செய்து கொண்டதாக நீலாம்பரியை நம்ப வச்சு, தனக்குத் தானே தாலி கட்டிக்கொண்டு வந்துடறா நிலா. இதை நீலாம்பரியிடம் ஆதாரத்தோடு சொல்ல வந்த வீர பத்ரன் தற்போது விபத்தில் நினைவில்லாமல் கிடக்கான். வீரபத்னுக்கு இவனும் நீலாம்பரியும் சேர்ந்து கொலை செய்த ஸ்ரீதர் அதாவது அன்வர் வைத்தியம் பார்த்து கொஞ்சம் நினைவுக்கு கொண்டு வந்துடறார். ஆனால், அவராக இருக்கும் ஸ்ரீதருக்கு நீலாம்பரியின் சதி வேலைகள் இப்போது நினைவில் இல்லாதபடி இருபது வருடங்களாக ஸ்ரீதருக்கு தான் ஸ்ரீதராக இருந்தோம் என்கிற நினைவு இல்லை. கடந்த இருப்பது வருட நினைவுகளில் அன்வராக மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

சொத்துக்கள் நிலா பேரில்
ஸ்ரீதர் நீலாம்பரியால் ஆபத்து என்று நினைத்து, தன் பேரில் இருக்கும் சொத்துக்களை தனது வாரிசான பெண் குழந்தைக்கு எழுதி வைத்து விடுகிறார். ஆனால், நிலாதான் அந்த பெண் குழந்தை என்று ஸ்ரீதருக்கு கூட தெரியவில்லை.ஆனால், நீலாம்பரிக்கு தெரிஞ்சு அவளை தனது மருமகளாக்கி சொத்தை எழுதி வாங்கிட நினைக்க, நீலாம்பரியின் தந்திரத்தை தெரிஞ்சுக்கிட்ட நிலா,அசோக்கை கல்யாணம் செய்து கொண்டது போல வீட்டுக்கு மருமகளா வந்துடறா.

நீலாம்பரி நாடகம்
நிலா தன் அப்பா சொத்துக்களை தான் மீட்டெடுக்க வேண்டும் என்று, நீலாம்பரியின் தம்பி பொண்டாட்டியாக நாடகம் போட, வந்துட்டியா, இரு உன் பேரிலிருக்கும் அத்தனை சொத்துக்களையும் என் பேருக்கு மாத்தி எழுத்திக்கறேன்னு நீலாம்பரியும் நாடகம் போடறாங்க. இப்படித்தான் கதை நகர்ந்துகிட்டு இருக்கு.இந்த நேரத்தில்தான் தாலி பிரிச்சு கோர்க்கும் சடங்கு நடக்குது.

சாமியாடியின் ஆட்டம்
முனீஸ்வரன் கோயிலில் சாமியாடியின் ஆட்டம் ரொம்ப நன்றாக இருந்தது. கருப்பு உடையில், வெள்ளைக் குதிரையில் ஐயா ஓடி வர்றார் முனீஸ்வரர்னு பாடலும் காதுக்கு இனிமையாக இருந்தது. இதற்கு முன்பாக தாலி கோர்க்கும் சடங்கும் முடிந்துவிட, இப்போது சாமியாடி பாடிகிட்டே கத்தியால் நிலாவை குத்த வர, அது தவறி அசோக்கின் மேல் பட்டுடுது. எல்லாரும் அதிர்ச்சியில் இருக்க சாமியாடி என்னடா கத்தியை மாத்தி செருகிட்டோமேன்னு அதிர்ச்சியில் இருக்கார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications