நீலாம்பரி நிலாவை நினைக்க... மகன் சஞ்சய் நிலா தங்கச்சி ஸ்வேதாவை சாச்சுப்புட்டானே மச்சான்!
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் நிலாவை தனது மகன் சஞ்சய்க்கு கல்யாணம் முடிச்சு, தன் மருமகளாக்கிக்க துடிக்கறாங்க. மகன் சஞ்சய் ஒரு பிளே பாய்.
நிலாவை நீலாம்பரி வீட்டுக்கு மருமகளாக்கிட்டு, நம்ம சின்ன பொண்ணை இன்னும் வசதியான வீட்டுல கல்யாணம் செய்து குடுத்துடலாம்னு நிலாவின் அம்மா கனவுல இருக்காங்க.
இந்த நேரத்துலதான் நிலாவின் தங்கச்சி ஸ்வேதாவை எப்படியாவது வசியப்படுத்தி அனுபவிக்க துடிக்கறான் சஞ்சய்.
என்னதான் வயசானாலும் பொண்டாட்டின்னா டங்கு ஸ்லிப்பாகுது பாருங்க...!
துப்பட்டா
ஸ்வேதாவின் துப்பட்டா வண்டியில் மாட்டி, சஞ்சய் உதவி செய்ததிலிருந்து, ஸ்வேதாவை துப்பட்டான்னுதான் கூப்பிடுவான் சஞ்சய். இன்னொரு நாள் வண்டியில் காத்தை புடுங்கிவிட்டு வம்பு செய்த சஞ்சயை ரசித்து பார்க்கறா ஸ்வேதா.
வலையில
ஸ்வேதா தன்னை கவனிப்பதை பார்த்த சஞ்சய், மீன் வலையில மாட்டிக்கும்னு சொல்றான். அதே மாதிரி ஒரு நாள் ஸ்வேதா வண்டியில் போகையில், திருடன் மாதிரி ஒருத்தனை நடிக்க வச்சு செயினை அத்துகிட்டு ஓட சொல்றான். அந்த சமயம் தன்னிச்சையாக வருவது போல வந்து, திருடனை துரத்துபவன் போல நடிக்கறான்.
செயின் புதுசு
என் கூட வாங்கன்னு சொல்லி நகைக்கடைக்கு அழைச்சுட்டு போறான். அவங்க அம்மா வாங்கி குடுத்த செயின் போலவே வாங்கி குடுத்து, சமாதானப்படுத்தி அனுப்பி வைக்கிறான். துப்பட்டா என் நினைப்பு வந்தா போன் பண்ணுன்னு சொல்றான்.
அவனின் நினைப்பு
அன்று இரவே அவனின் நினைவு வருது ஸ்வேதாவுக்கு.. போன் பண்ணலாமான்னு யோசிக்கறா. அதுக்குள்ளே அவனே பண்ணிடறான். ஹாய் துப்பட்டா எனக்கு போன் பண்ணலாம்னுதானே நினைச்சேன்னு கேட்கறான்.. அப்படி எல்லாம் இல்லைன்னு சொன்னவ.. விடிய விடிய அவன்கிட்ட பேசிகிட்டு இருக்கா.
ஸ்டார் ஹொட்டேல்
மறுநாள் ஸ்டார் ஹோட்டலில் மீட் பண்ணலாம்னு சொல்றான். அவள் வந்து காத்து நிற்க ஒருத்தர் வந்து சஞ்சய் சார் உங்களை டேபிள்ல காத்திருக்க சொன்னார்னு சொல்லி ஒருத்தன் கூட்டிட்டு போறான். கடைசியா சஞ்சய் பாடிகார்டு பாய்ஸுடன் வர்றான்.
பொக்கே
அழகிய பொக்கே குடுக்கறான், அதுக்குள்ளே உதவியாளர்கள் போர்டு மீட்டிங் உங்களுக்காக வெயிட்டிங்காம் சார்னு சொல்றான். அதுக்கு எனக்கு ஸ்வேதாதான் முக்கியம்னு சொல்லி அசர வைக்கறான்.ஒருத்தன் துபாய்லேர்ந்து போன் வந்திருக்கு சார்னு குடுக்கறான். இன்னொருத்தன் லண்டன்லேர்ந்து போன் வந்திருக்கு சார்னு சொல்றான். இவர் அத்தனையையும் ஸ்வேதாவுக்காக அவாய்ட் பண்றாராம்.
நச்சுன்னு இடம்
அப்போதான் ஸ்வேதாவின் இதயத்துல நச்சுன்னு இடம் புடிக்கறான் சஞ்சய்.பசங்க என்னவெல்லாம் பண்ணுவாங்கன்னு தெரிஞ்சு பொண்ணுங்க உஷாரா இருக்கவும் இது ஒரு நல்ல காட்சின்னு சொல்லலாம். எல்லாத்துலயும் ஏதாவது நம்ம எடுத்துக்க நல்ல விஷயம் இருக்கான்னு யோசிக்க ஆரம்பிச்சு அதைத் தேடி எடுத்துகிட்டாலே எல்லார் வாழ்க்கையும் நல்லா இருக்கும்.