நிரோஷாவா இது? கணவரோடு வெளியிட்ட க்யூட் புகைப்படம்.. நெகிழ்ச்சியான கேப்ஷன்.. இதை ஃபாலோ பண்ணுங்கப்பா
சென்னை: நடிகை நிரோஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடிகர் ராம்கியின் மனைவியான நிரோஷா வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் பலருக்கும் பரீட்சையமானவர்தான். தற்போது சீரியல் தயாரிப்பாளராகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் கதாநாயகியாகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் தன்னுடைய கணவர் ராம்கியோடு சேர்ந்தெடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நிரோஷா நெகிழ்ச்சியான கேப்ஷனையும் கொடுத்து இருக்கிறார்
வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடித்து பலருடைய மனதில் தனக்கென்று ஒரு இடத்தை அமைத்துக் கொண்டவர் தான் நிரோஷா. இவர் திரை குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் இவர் ஆரம்பத்தில் நடிக்க கூடாது என்று வீட்டில் பல எதிர்ப்புகள் கிளம்பி இருக்கிறதாம்.
நிரோஷாவின் தந்தையான எம்.ஆர் ராதா மற்றும் ராதிகா இருவருமே நடிப்பில் தனக்கென்று தனி முத்திரையை பதித்திருந்தாலும், நிரோஷா அவர்களுக்கு எல்லாம் விதிவிலக்காக அமையாமல் நானும் இவர்களை விட சலித்தவர் அல்ல என்று தன்னுடைய நடிப்பு திறமையை மூன்று வயதிலேயே காட்டி இருக்கிறார்.

நிரோஷாவின் அப்பா எம்.ஆர் ராதா ஒரு மிகப்பெரிய நடிகர் என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் அவருடன் தாலி பெண்ணுக்கு வேலி எனும் திரைப்படத்தில் நிரோஷா மூன்று வயதிலே எம்.ஆர் ராதாவின் மகளாகவே நடித்திருக்கிறாராம். இவருக்கு ஐந்து வயதில் இருக்கும் போது அவருடைய அப்பா இறந்துவிட்டாராம் .
நடிப்பில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கெட்டிக்காரியாராக இருந்த நிரோஷா 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறாராம். நடிக்க தொடங்குவதற்கு முன்பு நிரோஷாவின் வீட்டில் அவர்களுடைய அண்ணன்கள் இவருக்கு நடிப்பதற்கு அனுமதி கொடுக்காமல் தான் இருந்திருக்கிறார்களாம்.
ஆனால், இயக்குனர் மணிரத்தினம் தான் முதன் முதலாக ராதிகாவிடம் பேசி அவருடைய தங்கையை தன்னுடைய முதல் படத்தில் நடிக்க வைத்துள்ளாராம். நிரோஷாவிற்கு நடிப்பதற்கு ஆசை இருப்பதால் அவர் நடிக்கட்டும் என்று அவருக்கு பச்சைக்கொடி காட்டியது ராதிகாதானாம். முதல் திரைப்படம் ஆன அக்னி நட்சத்திரம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு வெற்றியை கொடுத்து இருந்ததாம்.
நிரோஷா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கமலுடன் இவர் நடித்த சூரசம்ஹாரம் என்னும் திரைப்படம் பெரிய அளவில் நிரோஷாவிற்கு சர்ச்சையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. இந்த திரைப்படத்தில் அதிக அளவில் முத்த காட்சிகள் இடம் பிடித்திருந்தாலும் இந்த காட்சிகளில் எப்படி புதியதாக நடிக்க வந்த நிரோஷா சரி என்று சொல்லிவிட்டார் என்று பலர் கேள்விகளை எழுப்பி இருந்தார்களாம்.
அது மட்டுமல்லாமல் பட வாய்ப்புக்காக ராதிகாவின் சகோதரி இப்படி நடிக்க ஓகே சொல்லி விட்டார்களா?? என்று ராதிகாவின் பெயரும்
அந்த நேரத்தில் அடிபட்டுக் கொண்டிருந்ததாம். ஆனால் அதற்குப் பிறகு செந்தூரப்பூவே படத்தில் ராம்கியுடன் குடும்ப பாங்காக இவர் நடித்தது ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டதாம்.
செந்தூரப்பூவே படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ராம்கி உடன் நிரோஷாவிற்கு காதல் ஏற்பட்டதாம். ஆனால் அப்போது கூட அவர் அதை வெளியில் சொல்லவில்லையாம். ஆனால் அதற்குப் பிறகு நிரோஷாவிற்கு நடைபெற்ற ஒரு ட்ரெயின் விபத்தில் ராம்கி தான் அவரை காப்பாற்றினாராம்.
அதுமட்டுமல்லாமல் அதற்கு பிறகும் ஒரு திரைப்படத்தில் இவர்கள் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த திரைப்படத்தில் நிரோஷாவை மாடு முட்டுகிற மாதிரி ஒரு சீன் இருந்ததாம். அதில் உண்மையாகவே நிரோஷாவை மாடு முட்ட வந்ததாம் அப்போது கூட ராம்கி தான் அவரை காப்பாற்றினாராம். அதனால் அவர் மீது நிரோஷா காதல் கொண்டு அவர்கள் ரகசிய திருமணம் செய்து வீட்டிற்கு தெரியாமல் மூன்று வருடங்கள் மறைத்து வந்தார்களாம்.
வீட்டில் காதல் திருமணத்திற்கு சம்மதிக்காததால் எவ்வளவோ அடி வாங்கி ராம்கிவை திருமணம் செய்து கொண்ட நிரோஷா திருமணத்திற்கு பிறகு மீண்டும் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். பல சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று நிரோஷா கணவர் ராம்கியோடு எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். அதற்கு "மகிழ்ச்சிக்கு பாதை இல்லை; மகிழ்ச்சியே பாதை" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். அதோடு இவர்களுடைய ஜோடி புகைப்படத்தை பார்த்ததும் ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் இளமையோடு காதலும் மாறாமல் இருக்கும் இந்த தம்பதியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல்












Click it and Unblock the Notifications