ஊட்டிக்கே போனாலும் இது வருமா? பக்கத்துல உட்கார்ந்து ஐஷுவ தடவி தூங்க வைக்க முடியுமா.. புலம்பும் நிக்ஸன்
சென்னை: ஊட்டிக்கு போனா ஐஷுவ நான் தடவி தூங்க வைக்க முடியுமா? என நிக்ஸன் சக போட்டியாளர்களிடம் புலம்பி வருகிறார்.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தொடங்கி ஒன்றரை மாதங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி ஆரம்பம் முதலே சூடுபிடித்த வண்ணம் இருக்கிறது.

வழக்கம் போல் இந்த சீசனிலும் சண்டகோழி, காதல் ஜோடிகள் என நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த சீசனில் ஐஷு நிக்ஷன், மணி, ரவீனா ஆகியோரைத்தான் காதல் ஜோடிகள் என அழைக்கிறார்கள். ஐஷு ஊட்டியை சேர்ந்தவர்.
அவரது பெற்றோர் ஏடிஎஸ் எனும் நடன பள்ளியை வைத்து நடத்தி வருகிறார்கள். அது போல் நடன கலைஞர் அமீரை ஐஷுவின் தந்தை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். எனினும் தற்போது இரு குடும்பத்தினருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நிக்ஸனுடன் சேர்ந்து ஐஷு அடிக்கும் லூட்டியை அவரது பெற்றோர் விரும்பவில்லை.
ஐஷுவுக்கு ஆரம்பத்தில் அவருடைய தாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ஆதரவு திரட்டி வந்தார். ஆனால் நிக்ஸனுடன் அவர் நடந்து கொள்ளும் அசிங்கமான செயல்களால் அவர் ஐஷு மீது கடுங்கோபத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஐஷுவுக்கு முந்தைய சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நிரூப் காதலர் என சொல்லப்படுகிறது.
நிரூப்பை ஐஷுவுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் அமீர் தான். இந்த நிலையில்தான் நாமினேஷனில் இருந்த பூர்ணிமா இந்த பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார் என சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக ஐஷு வெளியேறினார். இதற்கு ஐஷுவின் பெற்றோர் பிக்பாஸ் வீட்டை தொடர்பு கொண்டு ஐஷு விளையாடியது போதும், அவரை வெளியே அனுப்புங்கள் என கேட்டுக் கொண்டதால்தான் இப்படி நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ஐஷு எலிமினேட் ஆனதால் நிக்ஸன் சோகமாக இருக்கிறார். அவர் சக போட்டியாளர்களிடம் ஐஷு குறித்து புலம்பி வருகிறார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் உள்ள விக்ரம், அக்ஷயா, ஜோவிகா ஆகியோரிடம் ஐஷுவ நான் ஊட்டி சென்றால் பார்க்க முடியுமா? ஒரு வேளை பார்த்தாலும் இங்க இருந்தது போல அவர் பக்கத்தில் உட்கார்ந்து அவரை தடவி தூங்க வைக்க முடியுமா என கேட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications