பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் புது நடிகை!? அடுத்தடுத்து மாற்றம்.. இதுதான் காரணமா?
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வந்த சாய் காயத்ரிக்கு பதிலாக புது நடிகை நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூன்றாவது ஆக ஐஸ்வர்யா கேரக்டரில் சாய் காயத்திரி நடித்து வந்தார்.
இந்த நிலையில் சாய் காயத்திரி திடீரென்று இந்த சீரியலில் இல்லை என்றும் அவருக்கு பதிலாக வேறு நடிகை வரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஏற்கனவே ஐஸ்வர்யாவாக நடித்த விஜே தீபிகா மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தொடரும் இவருக்கு பதில் இவர்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூன்று வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் என்று பல நடிகர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்த நடிகர்கள் இப்போது இல்லை. குறிப்பாக இந்த சீரியலில் ஒரே வீட்டிற்குள் நடக்கும் வகையில்தான் கதை நகர்ந்து கொண்டு வந்தாலும், இதில் நடிக்கும் முன்னணி கதாநாயகர்கள் முக்கிய கேரக்டரில் நடித்து வந்தாலும் அவர்கள் திடீர் திடீரென விலகி விடுகிறார்கள். அதிலும் ஐஸ்வர்யா, மீனா,முல்லை கேரக்டருக்கு பல நடிகைகள் வந்தார்கள்.

திடீர் வெளியேற்றம்
ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் மூன்று நடிகைகள் மாறி இருக்கின்றனர். அதேபோல ஐஸ்வர்யா கேரக்டரிலும் மூன்று பேர் மாறி இருக்கின்றனர். ஆரம்பத்தில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடிகை வைஷாலி நடித்து வந்தார். அவரை தொடர்ந்து விஜே தீபிகா நடித்து வந்தார். இந்த நிலையில் பிஜே தீபிகா இந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருந்த நேரத்தில் தான் அவருடைய முகத்தில் இருந்த முகப்பரு காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

வெளியேவும் தொடரும் நட்பு
விஜே தீபிகா இந்த சீரியலில் இருந்து வெளியேறிய பிறகும் கண்ணனோடு சேர்ந்து அடிக்கடி ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் இருவரும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். தொடர்ந்து இவரே இந்த சீரியலில் இருந்து இருக்கலாம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மூன்றாவதாக நடிகை சாய் காயத்ரி நடித்து வந்தார். இவர் ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீரியலின் மூலமாக பலருக்கும் பரீட்சை மானவர் தான். இந்த சீரியலிலும் இவருடைய கேரக்டர் ஐஸ்வர்யாவாக இப்போது ரசிகர்களின் மனதில் பதிந்து இருக்கிறது.

மீண்டும் அதே ஐஸ்
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா கேரக்டரில் இருந்து சாய் காயத்ரி விலகி விட்டதாகவும், அதே கேரக்டரில் மீண்டும் விஜே தீபிகா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால் அதை குறித்து எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும் நடிகைகள் தரப்பில் இருந்தும் தெரிவிக்கவில்லை. அதுபோல சேனல் தரப்பில் இருந்தும் எதுவும் தெரிவிக்கவில்லை .ஆனால் தகவல்கள் நம்பத் தகுந்ததாக பரவி வரும் நிலையில் ரசிகர்கள் இதுகுறித்து பரவலாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications