Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்( Pandian Stores 2 serial today episode) பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கான எபிசோடில், கோமதி ஹாஸ்பிடலில் இன்னும் கண் விழிக்காமல் இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய மகள் நிலைமையை நினைத்து காந்திமதியும் அழுது கொண்டிருக்கிறார். தான் செய்த தவறை நினைத்து பாண்டியன் வருந்துகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Pandian Stores 2 serial Pandian Stores serial 2

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடு

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் (Pandian Stores 2 serial April 1 Episode ) இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ஹாஸ்பிடலில் கோமதியை செக் பண்ணிய டாக்டர் வெளியே வந்து, அவங்களுக்கு பிரஷர் மற்றும் பிபி மிகவும் குறைந்து போயிருப்பதாக கூறுகிறார். மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொண்டாங்களா என்று கேட்க, யாரும் சரியான பதில் சொல்ல முடியவில்லை. எவ்வளவு நேரம் மயங்கி இருந்தார் என்பதற்கும் பாண்டியன் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறார்.

கதறும் பாண்டியன்

கோமதிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை என்றும், உள்ளே சென்று பார்க்க அனுமதி இல்லை என்றும் டாக்டர் சொல்கிறார். இதனால் பாண்டியன் கவலையுடன் அமர்ந்திருக்கிறார். அவ நமக்காக பார்த்து பார்த்து எல்லா வேலையும் செஞ்சுட்டு இருந்தா ஆனா அவ சாப்பிட்டாளா இல்லையா என்று கூட யாருக்கும் தெரியலையே என்று பாண்டியன் புலம்பி கொண்டிருக்கிறார். மீனா அவரை சமாதானப்படுத்துகிறார். வீட்டில் கோமதி ஹாஸ்பிடலில் இருப்பது தெரிந்ததும் அரசி, காந்திமதி, ராஜி என எல்லோரும் கவலையாக இருக்கிறார்கள்.

Election 2026

அம்மா பாசம்

அப்போது காந்திமதி, நான் என் பசங்க வீட்டில் இருக்கும்போது கூட என் பொண்ணு பக்கத்துல இருந்தா நல்லா பாத்துக்குவேன்னு சொல்லிக்கொண்டே இருப்பேன். ஆனா இன்னைக்கு அவ உடம்பு சரி இல்லாம இருந்த நேரத்தில் நான் கூட இல்லாம போயிட்டேனே என்று அழுது கொண்டிருக்கிறார். அதோடு நான் பெத்த பொண்ணு இன்னைக்கு முடியாமல் ஹாஸ்பிடல்ல கண்ணு முழிக்காமல் கிடக்குறா.. நான் குத்துக்கல்லா இருக்கிறேன் என்றெல்லாம் அழுது கொண்டிருக்கிறார்.

ஹாஸ்பிடலில் நர்ஸ் வந்து ரெண்டு பேராக உள்ளே சென்று பார்க்கலாம் என அனுமதிக்கிறார். முதலில் பாண்டியன் மற்றும் சரவணன் உள்ளே செல்கிறார்கள். கோமதி கண் திறக்காததால் பாண்டியன் கவலையடைகிறார். பிறகு டாக்டர் மீண்டும் வந்து பார்க்கிறார். அதன்பின் மீனா மற்றும் கதிர் உள்ளே செல்கிறார்கள். அந்த நேரத்தில் செந்தில் போன் செய்து வரலாமா என கேட்க, மீனா இப்போது யாரும் வர வேண்டாம் என்று சொல்கிறார்.

பீல் பண்ணும் பாண்டியன்

பின்னர் மீனா மற்றும் கதிர், சரவணனிடம் பாண்டியனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல சொல்கிறார்கள். பாண்டியன் முதலில் மறுக்கிறார், ஆனால் மீனா சொன்னதால வீட்டுக்கு போகிறார். வீட்டுக்கு வந்த பாண்டியன் யாரிடமும் பேசாமல் தனது அறைக்கு சென்று தனியாக இருக்கிறார்.

கோமதி கீழே விழுந்ததும் கூப்பிட்ட போது தான் போய் பார்க்காததை நினைத்து வருத்தப்படுகிறார். அப்போது சரவணன் வந்து அவருக்கு ஆறுதல் சொல்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+