Pandian Stores: பாண்டியனை வீட்டை விட்டு போக சொன்ன கதிர்.. கோமதி அம்மாவால் உடையும் குடும்பம்! தரமான சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் 2026 மார்ச் 16ஆம் தேதிக்கான எபிசோடில், கோமதி மீனாவுடன் கோயிலுக்கு போனதை வைத்து ஒரு பெரிய பஞ்சாயத்தை நடந்து இருக்கிறது கடைசியில் பாண்டியன் எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

கோவிலுக்கு சென்ற கோமதி
சீரியலின் கதையின்படி, கோமதி மீனாவுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றிருக்கிறார். இந்த விஷயம் காந்திமதிக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அந்த சூழ்நிலையை காந்திமதி வேறு மாதிரி பயன்படுத்த நினைக்கிறார். அப்போது கோமதி வீட்டிலேயே தனது செல்போனை மறந்து விட்டதை அவர் கவனிக்கிறார்.
உடனே அந்த போனை எடுத்து சைலண்ட் மோடில் வைத்து விடுகிறார். கோமதி வீட்டில் இல்லாததை வைத்து வீட்டில் பெரிய டிராமா போட்டு, பாண்டியனையும் கோமதியையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும் என்று காந்திமதி ஒரு திட்டத்தை போடுகிறார்.
வீட்டில் பதட்டம்
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, காந்திமதி வீட்டில் கோமதி காணவில்லை என்று அழுது புலம்ப ஆரம்பிக்கிறார். அப்போது கதிர், பாண்டியனுக்கு போன் செய்து "அம்மா கடைக்கு வந்தாங்களா?" என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன் "இல்லை" என்று சொல்கிறார். உடனே கதிர், "காலையில் இருந்து அம்மாவை காணவில்லை" என்று பதட்டமாக சொல்கிறார்.
இதைக் கேட்டதும் பாண்டியன் அதிர்ச்சி அடைகிறார். உடனே சரவணனிடம் விஷயத்தை சொல்லி கடையை பூட்டி விட்டு அவசரமாக வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறார்.
வீட்டில் ஒப்பாரி வைத்த காந்திமதி
பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் காந்திமதி "என் பொண்ணை காணவில்லை" என்று கதறிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். அதை பார்த்த பாண்டியன், "அவ எங்கயாவது கோவிலுக்கு போயிருப்பா... வந்திருவா" என்று சமாதானப்படுத்த முயற்சிக்கிறார்.
கோவிலிலும் இல்லை என தகவல்
அப்போது கதிர் பேசும்போது, "அம்மாவை கோவிலில் தேடி பார்த்தாச்சு... எங்கும் இல்லை" என்று கூறுகிறார். அதற்குள் செந்திலும் வீட்டிற்கு வந்து சேர்கிறார். அம்மா காணாமல் போன விஷயம் தெரிந்ததும் அவர் அதிர்ச்சியடைகிறார்.
மீனாவிடம் கேட்க சொன்ன பாண்டியன்
இந்த நிலையில் பாண்டியன், "அவ மீனா கூட எங்கயாவது போயிருக்காளானு போன் போட்டு கேளு" என்று சொல்கிறார். அப்போது ராஜி, "நான் போன் போடுகிறேன்" என்று சொல்லி வெளியே செல்கிறார். ஆனால் மீனாவுக்கு போன் போனால் காந்திமதி போட்ட திட்டம் முழுக்க கலைந்து போய்விடும் என்று அவர் பயப்படுகிறார்.
ராஜியின் போனை கைப்பற்றிய காந்திமதி
அதனால் உடனே வெளியே சென்ற காந்திமதி, ராஜியின் போனை வாங்கிக் கொண்டு அவரை உள்ளே அனுப்புகிறார். பின்னர் மீனாவிடம் பேசும்போது எதுவும் நடக்காதது போல சாதாரணமாக பேசுகிறார்.
வீட்டில் பொய் சொன்ன காந்திமதி
அதற்குப் பிறகு உள்ளே வந்து "மீனா கூடவும் கோமதி இல்லை" என்று பொய் சொல்லிவிடுகிறார். இந்த தகவலை கேட்டதும் கதிரும் செந்திலும் மிகவும் கோபப்படுகிறார்கள்.
பாண்டியனை சுற்றி நின்று கேள்வி கேட்ட மகன்கள்
கதிர், பாண்டியனை பார்த்து "அம்மா எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்கனு நீங்க பேசாம இருக்கீங்க. நாங்க இப்போ நல்லா தான் இருக்கோம். அப்புறம் ஏன் உங்க ஈகோவை விட்டுக்கொடுக்க மாட்டீங்க?" என்று கேட்கிறார். மேலும் "இப்போ உங்களால தான் என் அம்மா இந்த வீட்டை விட்டு போயிட்டாங்க" என்று கடுமையாக பேசுகிறார்.
செந்திலும் கோபம்
அருகில் இருந்த செந்திலும் கோபமாக பேசுகிறார். "ஏற்கனவே என்னை இந்த வீட்டை விட்டு வெளியே அனுப்புனீங்க. இப்போ எங்க அம்மாவையும் அனுப்பிட்டீங்களா?" என்று அவர் கேட்கிறார்.
அதற்குப் பிறகு கதிர், "நாங்க ஆசைப்பட்ட மாதிரி கல்யாணம் பண்ணியதால் இப்போ சந்தோஷமா இருக்கோம். நீங்களும் உங்க விருப்பப்படி சரவணன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணிவச்சீங்க. இப்போ அவரோட வாழ்க்கை எப்படி இருக்கு? நியாயமா பார்த்தா நீங்க தான் இந்த வீட்டை விட்டு போயிருக்கணும்" என்று காட்டமாக பேசுகிறார்.
தன் ரூட்டுக்கு கொண்டு வந்த காந்திமதி
அப்போது காந்திமதி குறுக்கிட்டு பேசுகிறார். "பழைய பிரச்சனைகளை விடுங்கடா... இப்போ கோமதி காணாமல் போனதைப் பற்றி மட்டும் பேசுங்க" என்று கூறி அவர்களை தன் திட்டத்திற்கேற்ப அமைதியாக்குகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications