பதறும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரசிகர்கள்.. தங்கமயில் அனுப்பிய ஒரு போட்டோதான் காரணம்
சென்னை: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2-ல் தற்போது தங்கமயில் அனுப்பிய புகைப்படம் குடும்பத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
கடந்த வாரம் தங்கமயில், பாண்டியன் வீட்டிற்கு வீடியோ கால் செய்து பேசியபோது தனது புகைப்படத்திற்கு எந்த பதிலும் கிடைக்காததால் வருத்தப்பட்டார். இதையடுத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்கு மெசேஜ் அனுப்பினர். ஆனால், தங்கமயில் மற்றும் சரவணன் இருவரும் சேர்ந்து ரொமான்ஸாக எடுத்த புகைப்படத்தை தவறுதலாக குடும்ப குரூப்பில் அனுப்பிவிட்டார்.

இந்த புகைப்படம் குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மீனா, ராஜி, கோமதி ஆகியோர் தங்கமயிலை கிண்டல் செய்துள்ளனர். இது பாண்டியன் குடும்பத்தில் புதிய சண்டையை தூண்டியுள்ளது.

இந்நிலையில், ராஜியின் வீட்டில் நகை தொடர்பான பிரச்சனை மேலும் சிக்கலாகி வருகிறது. ராஜியின் அம்மா வடிவு, நகை எங்கே என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பதால் அவருடைய தந்தை கடும் கோபத்தில் உள்ளார். தண்ணீர் கூட குடிக்க கூடாது என்று ஆவேசமாகிறார் தந்தை.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ரசிகர்கள் இந்த புதிய திருப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தங்கமயில் மற்றும் சரவணன் இந்த பிரச்சனையிலிருந்து எவ்வாறு வெளிவரப் போகிறார்கள் என்பதை காண்பது சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













Click it and Unblock the Notifications