பாண்டியன் ஸ்டோர் சீரியல் குறித்து “மீனா” கொடுத்த ஹிண்ட்.. சுத்த மோசம்.. இப்படி கூட பண்ணுவாங்களா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்னும் ஒரு சில வாரங்களுக்குள் முடிவடைந்து விடும் என்ற ஒரு செய்திகள் பரவி வருகிறது.
இந்த நிலையில் அது குறித்த கேள்விக்கு மீனா கேரக்டரில் நடிக்கும் ஹேமா தன்னுடைய instagram பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார்.

அத்தோடு இந்த சீரியலின் கதை குறித்து ரசிகர்கள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அது குறித்து பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் கூட்டுக் குடும்ப முறை என்பது பலருக்கும் எட்டாத கனியாக இருக்கிறது. பலரும் அதை வெறுத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் இந்த சீரியலில் அண்ணன் தம்பி ஒற்றுமை மற்றும் கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷம் துக்கங்களை பற்றி விவரித்து கொண்டு இருக்கிறது.
ஆரம்பத்தில் இந்த சீரியல் ஒவ்வொரு வீட்டிலும் நடப்பது போன்று கதை நகர்ந்து கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் தனத்திற்கு கேன்சர் வந்தது தான் பெரும் பின்னடைவை சந்தித்தது. புற்றுநோய் பாதிக்கப்பட்ட ஒரு பெண் படும் அவஸ்தைகள் குறித்து அதில் இருந்து மீண்டு வந்தது குறித்தும் கதை புரட்சிகரமாக இருந்தால் பலருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கும். ஆனால் இந்த சீரியலில் டிஆர்பி அதிகரிப்பதற்காக தனம் கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் புற்றுநோயை மறைத்து மொத்த கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டிருந்தார்.
ஆனால் அதைத் தொடர்ந்து மீனா மற்றும் முல்லைக்கு தெரிய வந்த நிலையில் அவர்களும் வீட்டிற்க்கே சொல்லாமல் தனத்திற்கு ஆபரேஷன் செய்து முடித்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் சீக்கிரமாக முடிவுக்கு வந்துவிடும் என்று தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அது குறித்து அதிகமான ரசிகர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில் இந்த சீரியலில் மீனாவாக நடிக்கும் ஹேமா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பாண்டியன் ஸ்டோர் முடியப் போகுதா? என்று கேள்விக்குறியோடு போஸ்ட் போட்டு இருக்கிறார்.
அப்படி இருக்கையில் ஒரு மனைவி மார்பக புற்றுநோய்க்காக மார்பகத்தை ஆபரேஷன் செய்து அகற்றிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் தன்னுடைய கணவருக்கு கூட இந்த விஷயம் தெரியாதாம். இது நம்புற மாதிரியா இருக்கு? என்று பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் தனத்திற்கு புற்றுநோய் பாதித்திருந்ததும் ஆபரேஷன் செய்ததும் கதிருக்கு தெரிய வந்த நிலையில் கதிர் தன்னுடைய அம்மா ஸ்தானத்தில் தனத்திற்கு பணிவிடைகள் செய்கிறார்.
விரைவில் பாண்டியன் ஸ்டோர் குடும்பம் முழுவதும் புது வீட்டிற்கு போக இருக்கும் நிலையில் அதை முடிவடையாமல் மீண்டும் ஆரம்பித்த இடத்தில் இருந்தே கதை தொடர்வது போன்று பயணிக்கிறதே என்று பலர் கருத்து கூறிவரும் நிலையில், இனியாவது கதையில் சுவாரசியம் இருந்தால் நன்றாக இருக்கும் என்றும் நிஜமா என்ன மாதிரி சூழ்நிலைகள் நடக்குமோ அதை சீரியலில் கொண்டு வந்தால் இன்னும் இந்த சீரியல் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: சிந்தாமணி சதி! உண்மைகளை உளறிய மனோஜ், ஜெயிலுக்கு போகும் விஜயா! மீனா செய்த செயல் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications