Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கைது செய்யப்படும் கண்ணன்.. ஐஸ்வர்யாவால் வந்த புது பிரச்சனை..தனம் கொடுத்த அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் லஞ்சம் வாங்காமலே உயர் அதிகாரியின் சூழ்ச்சியால் லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் மாட்டுகிறார்.

அதே நேரத்தில் தனம் சீக்கிரமாக புது வீட்டுக்கு போக வேண்டும் என்று கிரகப்பிரவேச வேலைகளை அவசரப்படுத்தி கொண்டிருக்கிறார்.

Pandian Stores serial 2023 July 12th Episode full update Kannan will be arrested

இந்த நிலையில் ஐஸ்வர்யா தன் வீட்டில் இருந்த தான் வாங்கிய புது டிவியை தான் இருக்கும் முல்லையின் வீட்டிற்கு கொண்டு வரச் சொல்லி கதிரிடம் கூறுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜூலை பன்னிரெண்டாம் தேதிக்கான எபிசொடின் ஆரம்பத்தில் பேங்கில் கண்ணன் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு நபர் லஞ்சம் தருகிறேன் என்று சொல்லி கையெழுத்து போடுமாறு கேட்க, அதற்கு கண்ணன் மறுத்து விடுகிறார். அவர் கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்க கண்ணன் அதெல்லாம் வேண்டாம் என்று மறுத்தாலும் கிளெர்க் அவரிடம் வந்து சமாதானமாக பேசுகிறார்.

ஆனாலும் உறுதியாக கண்ணன் இனிமே என்கிட்ட லஞ்சத்தை பத்தி பேசாதீங்க என்று கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைக்கிறார். பிறகு தனம் தன்னுடைய அண்ணனுக்கு போன் செய்து கிரகப்பிரவேசத்துக்கு வருமாறு கூப்பிடுகிறார். அப்போது பாண்டியன் பிறந்த போது கூட நீ வீட்டுக்கு வரல எப்ப தான் வர போற என்று அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் வீட்டு வேலை எல்லாம் முடிஞ்சுதா அதற்குள் கிரகப்பிரவேசம் வைக்க போறேன்னு சொல்ற என்று கேட்க, இல்லன்னா இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு அதை கொஞ்சம் கொஞ்சமா செஞ்சுக்கலாம் என்று தான் யோசிக்கிறோம். ஆனாலும் நீ கண்டிப்பா கிரகப்பிரவேசத்துக்கு வந்துரு என்று சொல்லி சமாளித்தபடி தனம் போனை வைக்கிறார்.

அதே நேரத்தில் பேங்கில் கண்ணன் லஞ்சம் வாங்க மாட்டேன் என்று சொன்னதை பார்த்த மேனேஜர் பிளான் போட்டு கண்ணன் டேபிளில் பணத்தை வைத்து விடுகிறார். தொடர்ந்து லட்சம் தருகிறேன் என்று முதலில் வந்த நபர் லஞ்ச ஒழிப்பு ஆபீசர்களை கூட்டிட்டு வந்து இவர் என்கிட்ட 25,000 லஞ்சம் வாங்கினார் என்று பொய் சொல்லி மாட்டி விடுகிறார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கண்ணன் என்னிடம் பணமே கிடையாது வேணா செக் பண்ணி பாருங்க. என்கிட்ட 150 ரூபா மட்டும்தான் இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வந்தவர்கள் எல்லோரும் செக் பண்ணி பார்க்கும்போது கண்ணன் டேபிலில் இருந்த பணம் கண்டெடுக்கப்படுகிறது. பிறகு கண்ணனை அரெஸ்ட் பண்ணி விசாரிக்க கூட்டிக்கொண்டு போகின்றனர். அதே நேரத்தில் முல்லை குழந்தையை வைத்து ஐஸ்வர்யா விளையாடிக் கொண்டிருக்கிறார்.

அந்த நேரத்தில் கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு போன் செய்ய முயற்சி செய்ய அங்கிருந்த ஆபீசர்ஸ் கண்ணன் கையில் இருந்த போனை பிடிங்கி விடுகிறார்கள். தொடர்ந்து முல்லையும் ஐஸ்வர்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது தனம் வந்து அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போது, கதிரை அனுப்பி தன் வீட்டில் இருந்த டிவியை எடுத்துட்டு வர சொல்லி இருப்பதாக ஐஸ்வர்யா சொல்ல, தனம் திட்டி கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+