Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐஸ்வர்யாவை அவமானப்படுத்தி திட்டும் “அத்தாச்சி”.. மூர்த்தி எடுத்த முடிவு.. எதிர்பாராத திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு பெண் குழந்தை பிறந்திருக்கும் நேரத்தில் ஜெயிலில் இருக்கிறார்.

ஐஸ்வர்யா மற்றும் கண்ணனை அவருடைய சித்தி மருத்துவமனையில் வைத்து திட்ட ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்கிறார்.

Pandian Stores serial 2023 July 15th Episode full update Kasthuri insults Aishwarya

அதே நேரத்தில் கண்ணன் விஷயத்தில் கறாராக மூர்த்தி தன்னுடைய முடிவை சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஜூலை 15ஆம் தேதிக்கான எபிசோடின் ஆரம்பத்தில் ஐஸ்வர்யாவிற்கு திடீரென்று வயிறு வலி வந்து விட்டதால் தனம், ஜீவா, மீனா மூவரும் அவரை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போய் இருக்கிறார். இந்த நாள் வீட்டில் மூர்த்தி முல்லை கதிர் ஆகியோர் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்போது கதிர் கண்ணனை எப்படியாவது வெளியே எடுக்கணும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் தனம் போன் பண்ணி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்து விட்டதாகவும் பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் சொல்ல, மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். பிறகு ஐஸ்வர்யாவை பார்ப்பதற்காக கதிரும் முல்லையும் ஹாஸ்பிடலுக்கு செல்கின்றனர். அப்பொழுது ஐஸ்வர்யா கண்ணன் பற்றி விசாரித்து அழுகிறார்.

இதனால் கடுப்பான கஸ்தூரி அத்தாச்சி, உன்னால தான் கண்ணன் இவ்வளவு கடங்காரன் ஆனான், செய்றது எல்லாம் செய்துவிட்டு அழுதா எல்லாம் சரியாகிவிடுமா? என்று ஐஸ்வர்யாவை கண்டமேனிக்கு திட்ட, ஐஸ்வர்யா மேலும் அழுது கொண்டிருக்க தனமும், முல்லையும் ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்துகின்றனர்.

அந்த நேரத்தில் மீனாவும் ஜீவாவும் ஐஸ்வர்யாவையும் குழந்தையும் பார்த்துக் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கே மூர்த்தியும் வருகிறார். பிறகு ஐஸ்வர்யா மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். எப்படியாவது கண்ணனை வெளியில் எடுக்கும்படி கெஞ்சுகிறார். அதற்கு மூர்த்தி அவன் பண்ணுன தப்புக்கு நீயும் குழந்தையும் என்ன பண்ணுவீங்க என்று சமாதானப்படுத்துகிறார்.

இப்போது கதிர் நான் ஜெயிலுக்கு போய் கண்ணனை பார்த்துட்டு வருகிறேன் என்று சொல்ல, மூர்த்தி எதற்கு என்று திட்டுகிறார். அதற்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்ல வேண்டாமா? என்று கேட்க, அதெல்லாம் வேண்டாம். அவன் என்ன சாதனை செஞ்சிட்டா போயிருக்கான் என்று திட்ட தனம் சப்போர்ட் பண்ணி அவர்களை அனுப்பி வைக்கிறார்.

ஜெயிலுக்கு வந்த கதிர் மற்றும் ஜீவா கண்ணனிடம் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறந்த விஷயத்தை சொல்கின்றனர். இதைக் கேட்டு கண்ணன் சந்தோஷப்பட்டு பிறகு அழுகிறார். நான் செய்த தப்புக்கு எல்லாம் தண்டனையா தான் என்னுடைய குழந்தையை என்னால் பார்க்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணி பேசிக்கொண்டு இருக்க, வீட்டிற்கு வரும் கதிர் எப்படியாவது கண்ணனை வெளியே எடுக்க வேண்டும் என்று சொல்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+