தனம் நோய் பற்றி முல்லையிடம் சொன்ன மீனா.. அதிர்ச்சியில் கதிர்.. இனி நடக்கப் போவது இது தானா?
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தனமும் மீனாவும் பேசிக் கொண்டிருப்பதை கேட்டு முல்லைக்கு சந்தேகம் வருகிறது.
இந்த நிலையில் தனம் செய்வதை பார்த்து கோபமான மீனா தெருவில் தனியாக புலம்பி கொண்டு போவதை பார்த்து கதிர் அதிர்ச்சி அடைகிறார்.

அதைத்தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர் சீரியலின் ஜூலை 19ஆம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் மூர்த்தி வெளியில் இருந்து கொண்டு அழுது கொண்டிருக்கிறார். அப்போது கதிரும் ஜீவாவும் மூர்த்திக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்க, மூர்த்தி கண்ணன் லஞ்சம் வாங்கியதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவனை சரியாத்தானே வளர்த்தோம்.
ஆனால் அவன் ஏன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான் என்று கவலைப்பட்டு அழுது கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து வீட்டில் கிச்சனில் தனம் சமைத்துக் கொண்டிருக்க கண்ணன் தனத்தின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். அண்ணி நீங்க என்ன சரியாத்தான் வளர்த்தீங்க. நான் தான் தப்பு பண்ணிட்டு இருக்கேன். இனிமேல் இந்த தப்பை பண்ண மாட்டேன் என்று சொல்லி கதறி அழ, கதிர் கண்ணனை சமாதானப்படுத்துகிறார்.
பிறகு தனத்தின் அண்ணன் வந்து தனத்திடம் ஹாஸ்பிடல் போறியா? என்று கேட்க, தனம் முதலில் பயப்படுகிறார். பிறகு செக்கப் போறியா என்று கேட்ட போது தான் சந்தோஷப்படுகிறார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தனம் எனக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் பணம் வேண்டும். உன்னால் தர முடியுமா? கொஞ்சம் அவசரம் என்று கேட்க, அவர் வீட்டு வேலைக்கா என்று கேட்க? அதை பிறகு சொல்றேன். நீ எனக்கு பணத்தை கொடு என்று தனம் கறாராக கேட்கிறார்.
அதற்கு அவர் சரி என்று சொன்னதும் என் பெயரில் இருக்கிற அந்த இடத்தை நீ வச்சுக்கோ. இடத்தை வச்சிட்டு எனக்கு பணத்தை தந்தால் போதும் என்று தனம் அண்ணனிடம் வாக்குவாதம் செய்ய, முதலில் மறுத்த அவருடைய அண்ணன் பிறகு சரி என்று சம்மதிக்கிறார். அடுத்ததாக மீனா தனத்திடம் எப்போ ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போறோம்? எப்போ வீட்டில இந்த பிரச்சனையை பற்றி சொல்ல போறோம்? என்று கேட்க புது வீட்டுக்கு போனதுக்கு பிறகு ஆபரேஷன் பண்ணிக்கலாம் என்று தனம் சொல்ல மீனா கோபம் ஆகிறார்.
இப்போதைக்கு நாம அங்க போற மாதிரி தெரியல. வீட்ல சொல்லிரலாம் என்று மீனா திட்ட, அதற்கு தனம் வேணாம் நானே சொல்லிக்கிறேன் என்று சொல்கிறார். அதற்கு மீனா நீங்க சொல்லலனா நானே சொல்லிடுவேன் என்று சொல்ல, அந்த நேரம் உள்ளே வந்த முல்லை அக்கா கிட்ட என்ன நீங்க கேக்குறீங்க? சண்டை போடுறீங்களா? என்று கேட்க மீனா அங்கிருந்து ஒன்றும் இல்லை என்று சமாளித்தபடி வெளியே வந்து தெருவில் புலம்பிக்கொண்டே வருகிறார்.
தெருவில் மீனா புலம்பி கொண்டு போவதை பார்த்து கதிர் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து நாளை எபிசோட்டுக்கான பிரமோ வெளியானது. அதில் முல்லை மீனாவிடம் சென்று விசாரிக்க மீனா அக்காவுக்கு மார்பக புற்றுநோய் இருக்கிறது என்று சொல்ல முல்லை அதிர்ச்சி அடைகிறார்.












Click it and Unblock the Notifications