மீண்டும் வீடியோ எடுத்து ஆட்டம் போடும் ஐஸ்வர்யா..கடும் கோபத்தில் மூர்த்தி.. அவமானப்படுத்தும் மீனா
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூர்த்தி கண்ணன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்ட தனம் மூர்த்தியை சமாதானப்படுத்துகிறார்.
தனத்தின் திறமையை பார்த்து முல்லை வியந்து போய் பாராட்டுகிறார்
ஐஸ்வர்யா கதிர் வீட்டுக்கு வந்தும் திருந்தாமல் மீண்டும் வீடியோ எடுத்து கொண்டிருப்பதை பார்த்து மூர்த்தி கோபம் ஆகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஜூன் 7-ம் தேதிக்கான எபிசோடு ஆரம்பத்தில் மூர்த்தி கண்ணன் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று திட்டியதற்கு தனம் இதற்கு காரணமே கதிர்தான். கதிர் தான் தன்னுடைய தம்பியை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கான்.
அவன் உங்க கிட்ட கேட்காமல் அவன் தம்பிக்காக எடுத்த முடிவை நீங்க வேண்டான்னு சொன்னா அவன் ரொம்ப வருத்தப்படுவான் என்று கண்ணனுக்காக மூர்த்தியிடம் தனம் சண்டையிட்ட பிறகு வேறு வழி இல்லாமல் மூர்த்தி என்னவோ செய்யுங்க என்று கோபத்தோடு அந்த இடத்தை விட்டு கிளம்பி போய்விடுகிறார்.
இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சியான முல்லை தனத்தை ஓடி வந்து கட்டிப்பிடித்து எப்படிக்கா உங்களால் மட்டும் இப்படி எல்லாம் முடிஞ்சு. வார்த்தைக்கு வார்த்தை எங்க வீட்டுக்காரர் பேரை சொல்லியே நீங்க மாமா மனசை மாத்திட்டீங்க? அவரை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு தெரிஞ்சு இப்ப கண்ணனை வீட்ல இருக்க வச்சிட்டீங்களே என்று கேட்க தனம் எனக்கு மூர்த்தி மாமாவ பத்தி தெரியும்.
அதனால அவர் மனச மாத்துற மாதிரி பேசிட்டேன் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருக்க, கண்ணனும் ஐஸ்வர்யாவும் வந்து கண் கலங்க தனத்திற்கும் முல்லைக்கும் நன்றி கூறுகின்றனர். பிறகு முல்லை அதான் நீங்க இங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சே, இனி சந்தோஷமா இருங்க என்று குத்தலாக பேசுகிறார்.
அடுத்த நாள் காலையில் வீட்டில் வாங்கி இருந்த பேப்பரை எடுத்து படித்தபடியே கண்ணன் தனத்தை நக்கல் செய்து கொண்டிருக்க, அந்த நேரத்தில் வரும் மூர்த்தி கண்ணனை பார்த்து கோபமாகி பேப்பரை பிடுங்கி கொண்டு செல்கிறார். அப்போது தனம் நீங்க இங்க இருக்கிறது எல்லாம் சரிதான் நீங்க வீடியோ போடறது மாமாவுக்கு கொஞ்சம் புடிக்கல. அதனால அதை செய்யாதீங்க என்று சொல்லி கொண்டிருக்கிறார்.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா பாத்ரூம் அருகே நின்று வீடியோவில் பாத்ரூம் பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். அந்தப் பக்கமாக பாத்ரூம் செல்ல வரும் மூர்த்தியை வழிமறித்து இதுதான் எங்க மூர்த்தி , இவரு பெரிய சூப்பர் மார்க்கெட் வச்சிருக்கார் என்று வீடியோவில் காட்டியபடி பேசிக் கொண்டிருக்க, அதை பார்த்து மூர்த்தி கடுப்பாகி கோபமடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications