வீட்டை விட்டு கிளம்பும் தனம்..ஜீவாவால் அதிர்ச்சியில் மீனா..முல்லையின் பதிலடி..பரபரப்பான திருப்பம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முல்லையின் அம்மா திட்டியதால் தனம் மூர்த்தியை கூட்டிக்கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.

அம்மா செய்த சூழ்ச்சியை தெரிந்து கொண்ட முல்லை தனத்தை வெளியே போக விடாமல் தடுக்கிறார்.

ஜீவா தன்னுடைய அப்பாவிடம் கோபப்படுவதை பார்த்து மீனா கடுப்பாகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மே 15 மற்றும் 16ஆம் தேதிக்கான எபிசோட்டின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முல்லை இருக்கும் அறையில் தான் தனமும் தூங்குகிறார் என்ற உண்மையை தெரிந்து கொண்ட முல்லையின் அம்மா கோபமாகி முல்லையை திட்டுகிறார்.

Pandian Stores serial 2023 May 15th and 16th promo Highlights

முல்லைக்கு துணையாக இருக்க வேண்டும் என்று இன்று எபிசோட்டில் முல்லையின் அம்மாவும் வீட்டிற்கு வந்திருக்கிறார். அப்போது இரவு தூங்கும் போது முல்லைக்கு ஆறுதலாக இந்த அறையில் படுத்துக்கொள்ளுங்கள் என்று தனம் கூறியதை கேட்டு கடுப்பாகும் முல்லையின் அம்மா இத்தனை நாட்களாக முல்லையின் அறையில் தான் தனம் படுக்கிறார் என்பதை கேட்டு தனத்தை திட்டுகிறார்.

இது என்னுடைய மாப்பிள்ளை வாங்கின வீடு தானே என் மாப்பிள்ளையும் பொன்னும் ஒண்ணா இருக்காம நீ தொந்தரவு செய்வதற்காக தான் இங்கு இருந்துகிட்டு இருக்கியா? நீ உங்க அம்மா வீட்டுக்கு போயிரு என்று இன்றைய எபிசொட்டில் தனத்தை முல்லையின் அம்மா திட்ட தனம் மூர்த்தியை கூட்டிக்கொண்டு தன்னுடைய அம்மா வீட்டுக்கு கிளம்புகிறார்.

திடீரென்று தனம் வீட்டை விட்டு கிளம்புவதை பார்த்த அதிர்ச்சியான முல்லை மற்றும் கதிர் இருவரும் என்ன ஆச்சு எதுக்காக இப்படி பண்றீங்க என்று கேட்க அதற்கு எதுவும் சொல்லாமல் தனம் அமைதியாக இருக்க, எங்க அம்மா ஏதாவது உங்களை திட்டினாங்களா என்று முல்லை கேட்க பிறகு என் மேல சத்தியமா சொல்றேன் நீங்க இந்த வீட்டை விட்டு போக கூடாது என்று முல்லை தனத்தின் கையை பிடித்து தலையில் வைத்து சத்தியம் செய்கிறார்.

Pandian Stores serial 2023 May 15th and 16th promo Highlights

முல்லை அம்மாவை திட்டியதால் கடுப்பான அவர் தனத்தை திட்டுகிறார். எல்லாத்தையும் போட்டு கொடுத்துட்டியா என்று திட்ட அதற்கு கதிர் எங்க அன்னிய ஏதாவது சொல்லிக்கிட்டு இருந்தீங்கன்னா நடக்கிறதே வேற, நீங்க இங்க இருந்து போங்க என்று சொல்கிறார். இதனால் தனத்தின் மீது கடும் கோபத்தில் முல்லையின் அம்மா இருக்கிறார்.

இந்த நிலையில் கயல் பாப்பாவின் பெயரை மாற்றி வைக்க வேண்டும் என்று ஜனார்த்தனன் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சொன்னதை கேட்டு கோபமான ஜீவா. நான் இந்த வீட்டுக்கு வந்து இருக்கவே கூடாது. இந்த வீட்டுக்கு இப்ப வருவதற்கு எனக்கு பிடிக்கவில்லை என்று மீனாவிடம் கூறுகிறார். இந்த நிலையில் இனி என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+