கண்ணனால் ஜெயிலுக்கு போகும் கதிர்..மூர்த்தி எடுத்தஅதிரடி முடிவு..கோபத்தில் ஐஸ்வர்யா..திடீர் திருப்பம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் கிரெடிட் கார்ட் பணம் கட்டாததால் பேங்கில் இருந்து ஆட்கள் கண்ணனை அடிக்கும் போது கதிர் வந்து தடுக்கிறார்.
கதிர் வந்தவர்களை திருப்பி அடித்ததால் போலீசால் கதிர் கைது செய்யப்படுகிறார்.
இதனால் கோபமான மூர்த்தி கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை திட்டுகிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கான இந்த வாரத்திற்கான ஹிண்ட் கிடைத்திருக்கிறது. இன்றைய எபிசோடில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவை கிரெடிட் கார்டு பணம் கட்டாததால் வீட்டிற்கு வந்து பேங்க் ஆபீஸர்ஸ் மிரட்டி விட்டு சென்று இருக்கின்றனர்.
வரும் வியாழக்கிழமை வரைக்கும் தான் இவர்களுக்கு டைம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை வளைகாப்பு இருப்பதால் அதற்கு முன் எப்படி கட்டுவது என்று கண்ணன் கேள்வி கேட்க, அதுவெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். இன்னும் ரெண்டு மூணு நாட்கள் இழுத்து அடித்து விட்டோம் என்றால் வளைகாப்புகள் பிறகு நமக்கு பணம் வர தொடங்கிவிடும். அதை வைத்து இவர்களுடைய கடனை அடைத்து விடலாம் என்று ஐஸ்வர்யா அசால்டாக பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் வியாழக்கிழமை மீண்டும் பேங்கில் இருந்த ஆஃபீஸர்ஸ் வந்து கண்ணனிடம் பிரச்சனை செய்து அடிக்க முற்படும் போது அங்கே வரும் கதிர் அவர்களை அடித்து விரட்டுகிறார். இதனால் அவர்கள் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து கதிரை கைது செய்து ஜெயிலில் அடைகின்றனர்.
இது தெரிந்த மூர்த்தி கோபமாகி கண்ணனை வந்து திட்டுகிறார். கதிர் ஜெயிலில் இருப்பதால் ஐஸ்வர்யாவின் வளைகாப்பு நிறுத்தப்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா கோபம் ஆகிறார். கதிர் மாமாவை யார் அடிக்க சொன்னது அதனால்தான் எங்களுடைய பங்க்ஷன் நடக்காமல் போய்விட்டது என்று ஐஸ்வர்யா கோபத்தில் திட்ட இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் வரும் வாரத்தில் இந்த சீரியலில் பெரும் பிரச்சனைகளும் திருப்பங்களும் ஏற்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications