ஜீ தமிழ் சீரியலில் கமிட்டான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. ஆரம்பத்திலேயே இப்படியா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் பிரபலமடைந்த நடிகை லாவண்யா ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் முக்கிய கேரக்டரில் அறிமுகமாக இருக்கிறார். அது குறித்து பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல புதியதான கதைகளத்தோடு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிக்கும் நடிகர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகிறார்கள். அதிலும் விஜய் டிவியில் சீரியலில் நடிக்கும் நடிகர்கள் இளைஞர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் மற்றும் சிற்பிக்குள் முத்து சீரியல் மூலம் பிரபலமடைந்த லாவண்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இது குறித்து ரசிகர்கள் அவரிடம் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முதல் பாகத்தில் கதிர் -முல்லை ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்தனர். ஆனால் அந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த வி.ஜே சித்ரா திடீரென்று மரணம் அடைந்ததால் அவருக்கு பதிலாக காவியா நடித்து வந்தார் அவரும் சீரியலில் இருந்து திடீரென்று விலகியதை தொடர்ந்து அவர் கேரக்டரில் நடிகை லாவண்யா நடித்து வந்தார். லாவண்யா ஏற்கனவே சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்திருந்தார்.

அதுபோல நடிகையாக மட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் லாவண்யா அடிக்கடி லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்திருப்பார். அப்போதுகூட தன்னுடைய ஆரம்ப காலம் குறித்து பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். ஆரம்பத்தில் தான் பேங்கில் வேலை பார்த்த நிலையில் தனக்கு நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக அதிலிருந்து விலகி நடிக்க தொடங்கி இருந்தேன். ஆனால் ஆரம்பத்தில் குடும்பத்தில் அதற்கு சம்மதிக்கவில்லை.
பிறகு ஒரு வழியாக அவர்களை சம்மதிக்க வைத்து இப்போது என்னுடைய கனவை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருந்தார். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு பிறகு அவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் என்ற சீரியலில் முக்கிய கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இந்த தகவல்கள் வெளியானதும் ரசிகர்கள் அவரிடம் இந்த மாதிரி ஸ்பெஷல் என்ட்ரி எல்லாம் வேண்டாம், சீக்கிரமாக மெயின் கேரக்டரில் கமிட் ஆகுங்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications