Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திடீரென வலியில் துடிக்கும் ஐஸ்வர்யா..மருத்துவமனையில் திணறும் கண்ணன்..பரபரப்பான தருணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் திடீரென்று ஐஸ்வர்யாவுக்கு வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க இருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ஏற்கனவே அழுது கொண்டே இருந்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.

இந்த வேளையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

Pandian Stores serial Aishwarya is admitted to hospital in the upcoming episode

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த முல்லையின் வளைகாப்பு பங்க்ஷன் இனிதே முடிவடைந்தது. இதில் யார் பிரச்சனை செய்வார்கள்? என்றும் ஏற்கனவே வெளியான ப்ரோமோ கனவா நினைவா? நிஜத்தில் ஜீவா வளைகாப்புக்கு வருவாரா? என்று பல கேள்விகள் இருந்த நிலையில் தற்போது அதற்கெல்லாம் விடை கிடைத்து நல்லபடியாக அனைவரும் முல்லை வளைகாப்பில் கலந்து கொண்டு இருந்தனர்.

ஆனால் ஐஸ்வர்யாவை மல்லியும் ஐஸ்வர்யாவின் சித்தியும் கடைசியில் அவமானப்படுத்தி அனுப்பி இருக்கின்றனர். ஓடிப்போய் கல்யாணம் பண்ணின மாதிரி ஓடி போய் வளைகாப்பு பண்ணி, குழந்தை பெத்துக்க முடியுமா? உனக்கு யாரு குழந்தை பேருகாலம் பார்ப்பார்கள் என்று மல்லி கேட்ட கேள்வியால் கோபத்தில் அதையே நினைத்து நினைத்து ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் இனி வரும் எபிசோட்டில் ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டு விடவே அவரை கண்ணன் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறார். பின்பு அங்கு தன்னுடைய கார்ட் உபயோகிக்க முடியாமல் போய்விடுகிறது. ஏற்கனவே தன்னுடைய கிரெடிட் கார்டு லிமிட் வரைக்கும் கடன் வாங்கி வைத்திருக்கும் ஐஸ்வர்யாவால் மருத்துவமனையில் பணம் கட்ட முடியாமல் கண்ணன் தவிக்க இருக்கிறாராம்.

இந்த நிலையில் தனக்கு உதவியாக கண்ணன் கதிருக்கு போன் போடுகிறார். ஜீவா கண்ணனுக்கு உதவுவதற்காக கதிர் மொத்த குடும்பத்தோடு மருத்துவமனைக்கு ஓடி செல்கிறார். இதனால் இனி கண்ணனும் ஐஸ்வர்யாவும் மனம் மாறி குடும்பத்தோடு சேர இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

அதே நேரத்தில் மூர்த்தி தனியாக பொருள்களை டெலிவரி செய்து கொண்டிருப்பதை பார்த்த ஜீவா பீஃல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் இனி மூர்த்திக்கு உதவியாக ஜீவாவும் மனம் மாறி பெட்டிகளை இறக்கி வைத்து உதவி பண்ணுகிறார். அதுபோல இனி ஜீவாவும் தன்னுடைய அண்ணனின் கஷ்டத்தை பார்த்து உதவியிருக்கும் நிலையில் இனி எதிர்பாராத பல நிகழ்வுகள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+