திடீரென வலியில் துடிக்கும் ஐஸ்வர்யா..மருத்துவமனையில் திணறும் கண்ணன்..பரபரப்பான தருணம்
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் திடீரென்று ஐஸ்வர்யாவுக்கு வயிறு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்க இருக்கிறார்கள்.
ஐஸ்வர்யா ஏற்கனவே அழுது கொண்டே இருந்த நிலையில் திடீரென்று அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது.
இந்த வேளையில் இனி என்ன நடக்கப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகியிருக்கிறது. அது குறித்து பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த முல்லையின் வளைகாப்பு பங்க்ஷன் இனிதே முடிவடைந்தது. இதில் யார் பிரச்சனை செய்வார்கள்? என்றும் ஏற்கனவே வெளியான ப்ரோமோ கனவா நினைவா? நிஜத்தில் ஜீவா வளைகாப்புக்கு வருவாரா? என்று பல கேள்விகள் இருந்த நிலையில் தற்போது அதற்கெல்லாம் விடை கிடைத்து நல்லபடியாக அனைவரும் முல்லை வளைகாப்பில் கலந்து கொண்டு இருந்தனர்.
ஆனால் ஐஸ்வர்யாவை மல்லியும் ஐஸ்வர்யாவின் சித்தியும் கடைசியில் அவமானப்படுத்தி அனுப்பி இருக்கின்றனர். ஓடிப்போய் கல்யாணம் பண்ணின மாதிரி ஓடி போய் வளைகாப்பு பண்ணி, குழந்தை பெத்துக்க முடியுமா? உனக்கு யாரு குழந்தை பேருகாலம் பார்ப்பார்கள் என்று மல்லி கேட்ட கேள்வியால் கோபத்தில் அதையே நினைத்து நினைத்து ஐஸ்வர்யா அழுது கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இனி வரும் எபிசோட்டில் ஐஸ்வர்யாவுக்கு திடீரென்று வயிறு வலி ஏற்பட்டு விடவே அவரை கண்ணன் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறார். பின்பு அங்கு தன்னுடைய கார்ட் உபயோகிக்க முடியாமல் போய்விடுகிறது. ஏற்கனவே தன்னுடைய கிரெடிட் கார்டு லிமிட் வரைக்கும் கடன் வாங்கி வைத்திருக்கும் ஐஸ்வர்யாவால் மருத்துவமனையில் பணம் கட்ட முடியாமல் கண்ணன் தவிக்க இருக்கிறாராம்.
இந்த நிலையில் தனக்கு உதவியாக கண்ணன் கதிருக்கு போன் போடுகிறார். ஜீவா கண்ணனுக்கு உதவுவதற்காக கதிர் மொத்த குடும்பத்தோடு மருத்துவமனைக்கு ஓடி செல்கிறார். இதனால் இனி கண்ணனும் ஐஸ்வர்யாவும் மனம் மாறி குடும்பத்தோடு சேர இருக்கலாம் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.
அதே நேரத்தில் மூர்த்தி தனியாக பொருள்களை டெலிவரி செய்து கொண்டிருப்பதை பார்த்த ஜீவா பீஃல் பண்ணிக் கொண்டிருக்கிறார். இதே நேரத்தில் இனி மூர்த்திக்கு உதவியாக ஜீவாவும் மனம் மாறி பெட்டிகளை இறக்கி வைத்து உதவி பண்ணுகிறார். அதுபோல இனி ஜீவாவும் தன்னுடைய அண்ணனின் கஷ்டத்தை பார்த்து உதவியிருக்கும் நிலையில் இனி எதிர்பாராத பல நிகழ்வுகள் நடக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
-
கண் கலங்க வைத்த நீயா நானா.. இது பலருக்கும் பாடம்.. கடந்து வந்த வலி, கோபிநாத்தை மிரட்டி விட்ட அம்மா! -
சிறகடிக்க ஆசை: எலக்ஷனில் ஜெயித்த மீனா.. பிறகு நடந்த எதிர்பாராத சம்பவம்! மனம் மாறும் விஜயா.. சிந்தாமணியின் பிளான் -
சிறகடிக்க ஆசை சீரியல் அணிலா ஸ்ரீகுமாருக்கு 3வது கல்யாணம்.. குழந்தைகள் முன்பே நடந்த சம்பவம்! குவியும் வாழ்த்து -
கொலை மிரட்டல் விடுறாங்க.. பயமா இருக்கு.. கமிஷனர் ஆபீஸில் பதறிய வாட்டர் மெலன் திவாகர்! -
ராத்திரி நேரத்து பூஜையில்.. விஜய் டிவி நிகழ்ச்சியில் டிஸ்கோ சாந்தி போட்ட டான்ஸ்! அசந்து போன ரம்பா! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள்












Click it and Unblock the Notifications