Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குழந்தையை கையில் வாங்கும் கதிர்.. கடன் பிரச்சனையால் அவமானப்படும் கண்ணன்.. மூர்த்தி எடுக்கும் முடிவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல போராட்டங்களுக்குப் பிறகு கதிர் தன்னுடைய குழந்தையை கையில் வாங்கி மகிழ்ச்சியை கொண்டாடுகிறார்.

முதல் முறையாக முல்லையும் தன்னுடைய குழந்தையோடு சந்தோஷமாக இருப்பதை பார்த்து முல்லையின் அம்மாவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இந்த நிலையில் இனி கண்ணன் ஐஸ்வர்யா கடன் வாங்கி வைத்திருக்கும் பிரச்சனை வீட்டிற்கு தெரிய இருக்கிறது.

Pandian Stores serial Kannan is humiliated by the debt problem Murthy takes the decision

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அடுத்த திருப்பம் நடைபெற தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவின் சித்தியிடம் கடன் வாங்கி வைத்து இருக்கும் நிலையில் இனி அந்த ரகசியம் வீட்டிற்கு தெரிய இருக்கிறது.

முல்லையும் கதிரும் மருத்துவமனைக்கு போகும் வழியில் ரத்தினம் வந்து பிரச்சனை செய்ததால் முல்லையின் வயிற்றில் பைக்கில் மோதியதால் அடிபட்டு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் இருந்த முல்லைக்கு இறுதியில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அனைவரும் இருக்கின்றனர்.

ஆனாலும் முல்லையின் இந்த நிலைமைக்கு ரத்தினம் தான் காரணம் என்று கடும் கோபத்தில் இருக்கும் கதிர் ரத்தினத்தை போட்டு அடித்து உதைத்து கொலை செய்ய முயற்சி செய்தபோது கடைசி நேரத்தில் ஜீவா வந்து அதை தடுத்து நிறுத்தி கதிரை அங்கிருந்து கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இப்போது எல்லோரும் மருத்துவமனையில் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முல்லை மற்றும் கதிர் கையில் குழந்தை கொடுக்கப்படுகிறது.

குழந்தையின் முகத்தை பார்ப்பதற்காக கதிர் மற்றும் முல்லை இருவரும் அதிகமான ஏக்கத்தில் இருந்த நிலையில் குழந்தை இருவருடைய கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை பார்த்து மகிழ்ச்சியில் கண் கலங்குகின்றனர். இவர்கள் இருவரும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகின்றனர். இந்த நிலையில் முல்லையை ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில் வீட்டில் அனைவரும் சந்தோஷமாக இருக்கும் நிலையில் அந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி கடன் வாங்கி கொடுத்த நபர்கள் வீட்டிற்கே வந்து கண்ணன் மற்றும் ஐஸ்வர்யாவிடம் பிரச்சனை செய்ய அது தெரிந்து மூர்த்தி கடும் கோபமடைய இருக்கிறார். ஏற்கனவே வீட்டிற்குள் கண்ணனை சேர்க்கும் போது இவனால் இனி எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் மூர்த்தி என்ன முடிவெடுக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+