பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கு பதில் இவர்.. அதிரடியாக மாறிய கதை! செம சர்ப்ரைஸ் இருக்கு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து எதிர்பாராத கதைகளம் நடக்க இருக்கிறது. அது குறித்த வீடியோவை இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ஸ்டாலின் முத்து பகிர்ந்து இருக்கிறார். அதேபோல இந்த சீரியலில் முக்கிய பிரபலம் ஒருவரும் மாறி இருக்கிறார். அது யார் என்று பார்க்கலாம்.
விஜய் டிவியில் டிஆர்பியில் முன்னணி இடத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலின் முதல் பாகம் நான்கு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்தது. அந்த சீரியல் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருந்தனர்.

ரசிகர்களுக்கு வருத்தம்
அதேபோல இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தொடங்கப்படும் போது பல்வேறு எதிர்பார்ப்புகளும் இருந்தது. ஏற்கனவே அந்த நேரத்தில் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்ட பல சீரியல்கள் ஒரு சில வாரத்திற்குள் இழுத்து மூடும் நிலைமையில் தான் இருந்தது. எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி வரவில்லை.
1000 எபிசோடு தாண்டிய சீரியல்
முதல் பாகத்தில் வெற்றி பெற்றாலும் இரண்டாவது பாகம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படாமல் இருந்தது. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் அந்த வரிசையில் இடம் பிடித்து விடுமோ என்று அந்த சீரியலின் ரசிகர்கள் வருத்தத்தோடு இருந்தார்கள். ஆனால் இரண்டாவது பாகமும் ரசிகர்களை கவர்ந்து விட்டது. இந்த சீரியலில் முதல் பாகத்தில் நடித்த ஒரு சிலர் மட்டும் இரண்டாவது பாகத்தில் தொடர்கிறார்கள்.
இரண்டாவது பாகம்
அதேபோல கதைகளம் முதல் பாகத்திற்கு இரண்டாவது பாகத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் முதல் பாகத்தில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் இந்த இரண்டாவது பாகத்தில் அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்போது சூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.
குடும்ப சண்டை
அதில் அவர் மழையில் நனைந்து ஃபீல் பண்ணி கொண்டிருப்பது போன்று காட்சிகள் இருக்கிறது. ஏற்கனவே பாண்டியன் குடும்பத்திற்கும் அவருடைய மனைவி கோமதியின் அண்ணன் குடும்பத்திற்கும் பிரச்சனை தான். இரண்டு குடும்பத்திற்கும் அடிக்கடி பிரச்சினை. கோமதி பாண்டியனை செய்து கொண்டதால் இன்னமும் அவருடைய அண்ணன்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

பாட்ஷாவாக மாறிய பாண்டியன்
அதேபோல பாண்டியனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக கோமதியின் அண்ணன் மகன்
குமார் பாண்டியன் மகள் அரசியை காதலிப்பதாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதை அரசியும் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் தான் இப்போது பாண்டியன் மழையில் நனைந்து பீல் பண்ணிக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் சூட்டிங் எடுக்கப்பட்டிருக்கிறது.
என்ன நடக்க போகிறது
இதை பார்க்கும் போது அரசியின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வருமா? அல்லது அரசி குமாரை திருமணம் செய்து விடுவாரா? அதனால்தான் பாண்டியன் எவ்வளவு ஃபீல் பண்ணுகிறாரா என்ற கேள்விகள் வருகிறது. அதனால் இனி வரும் காட்சிகள் பரபரப்பாகவும் சென்டிமென்ட் நிறைந்த விதமாக இருக்கப் போகிறது என்று தெரிகிறது.

இவருக்கு பதில் இவர்
அதுபோல இந்த சீரியலின் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட்டிருக்கிறார்கள். இரண்டாவது பாகம் புது கூட்டணியில் தொடங்கப்பட்டிருந்த நிலையில் இப்போது முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் டேவிட் மற்றும் ஒளிப்பதிவாளர் முத்துசாமி தான் இந்த சீரியலில் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் பாக்கியலட்சுமி சீரியல் மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை இயக்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
திவாகருக்குள் தான் ஜாதி வெறி இருக்கு.. குக் வித் கோமாளியில் நடந்தது இதுதான்! கானா வினோத் ஆதங்கம் -
“குக் வித் கோமாளி” போட்டியாளர் மனைவியிடம் திவாகர் ஆபாசமாக அப்படி பேசினாரு! அதனால் தான் பிரச்சனை! மாகாபா விளக்கம் -
சிறகடிக்க ஆசை: மனோஜ்க்கு நடந்த நிச்சயதார்த்தம்.. விஜயாவை சிக்க வைத்த ஸ்ருதி.. முத்துக்கு தெரிந்த விஷயம் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications