மருமகளை தொடர்ந்து மகனுக்கு வாழ்த்து.. “என் உயிர் நாடி” என பூர்ணிமா உருக்கம்.. ராதிகா கொடுத்த கமெண்ட்
சென்னை: நடிகை பூர்ணிமா பாக்யராஜ் தன்னுடைய மகன் குறித்து நெகிழ்ச்சியோடு ஒரு பதிவு வெளியிட்டிருந்த நிலையில் அது இணையத்தில் அதிகமான வாழ்த்துக்களை பெற்று வருகிறது. தன்னுடைய மகன் பற்றி பூர்ணிமா போட்ட பதிவுக்கு நடிகை ராதிகா, கமெண்ட் கொடுத்திருக்கிறார். அதுவும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவில் 1980 ஆம் ஆண்டு முதல் கதாநாயகியாக நடித்து வந்த நடிகை பூர்ணிமா பாக்யராஜ் நடிகர் பாக்யராஜ் காதலித்து திருமணம் செய்து கொண்டு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார். பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா தம்பதிக்கு சரண்யா மற்றும் சாந்தனு என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் சாந்தனு பிரபல நடிகராக இப்ப வரைக்கும் இருந்து வருகிறார். ஆனால் சரண்யா ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகி இருக்கிறார்.

சில வருடங்களுக்கு முன்பு சரண்யா காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி எடுத்து இருந்த நிலையில் அது அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. அதற்குப் பிறகு இப்போது தன்னுடைய பழைய நிலைக்கு மாறியிருக்கும் சரண்யா பிசினஸ் செய்து பல பெண்களுக்கு முன் மாதிரியாக பிசினஸில் அசத்தி கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு மீண்டும் தன்னுடைய நடிப்பை தொடங்கிய பூர்ணிமா பாக்யராஜ் இப்போது தமிழ் சினிமாவில் அம்மா மற்றும் மாமியார் போன்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.
பூர்ணிமா வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல பாக்கியராஜ் ஆரம்ப காலகட்டத்தில் பெரிய இயக்குனராக இருந்தாலும் இப்போது அதிகமாக திரைப்படங்களை இயக்கவில்லை. நடித்து மட்டும் கொண்டிருக்கிறார். அவர் இயக்குனர் மற்றும் நடிகராக இருந்த காலகட்டத்தில் அவருடைய வீட்டில் வாய்ப்புக்காகவும் கதை சொல்வதற்காகவும் பல கிலோமீட்டர்க்கு வரிசையில் பலர் நின்று கொண்டிருப்பதாக சிலர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.

ஆனால் இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் பாக்கியராஜ் சில சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது கெஸ்ட் ஆக கலந்து கொள்கிறார். அதேபோல பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமாவின் மகன் சாந்தனு சின்னத்திரை தொகுப்பாளரான கீர்த்தி என்ற கிகியை தான் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். சாந்தனு தான் காதலிக்கும் விஷயத்தை தன்னுடைய தந்தை பாக்யராஜிடம் சொன்னதும் அவர் நேரடியாக கிகி வீட்டில் சென்று பெண் கேட்டு இரு வீட்டாரின் சம்மதத்தோடு தான் இவர்களின் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு எல்லோரும் கூட்டுக் குடும்பமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கீர்த்தியின் பிறந்தநாளுக்கு அவருடைய மாமியாரான பூர்ணிமா பாக்கியராஜ் "எங்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சி தந்ததற்கு ரொம்ப நன்றி" என்று ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதுபோல பூர்ணிமா எந்த பேட்டிகளிலும் பேசும்போதும் தன்னுடைய மருமகள் குறித்து அவள் என்னுடைய மகள் தான் என்னுடைய மகனை மொத்தமாக மாற்றி இருக்கிறார் எங்கள் வீட்டில் செல்ல பெண் என்று பேசி இருக்கிறார்.

இந்த நிலையில் பூர்ணிமா இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தன்னுடைய மகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சாந்தனுவின் சிறுவயது முதல் இப்போது வரை உள்ள பல புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அதில், "சில சமயங்களில் என் தந்தையை போலவே நடந்து கொள்ளும் என்னுடைய உயிர் நாடி... எனக்கு அறிவுரை கூறுவது, என்னை நேசிப்பது என்னுடைய சோனு (சாந்தனு)தான் என்று சாந்தனுவிற்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பூர்ணிமா தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதில் ராதிகா சரத்குமார், “பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தனு.. உங்களுக்கு எல்லாம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார். இந்த கமெண்டுக்கு அதிகமான லைக்குகள் வருகிறது. அதுபோல தன்னுடைய அம்மாவின் வாழ்த்துக்கு சாந்தனு நன்றி தெரிவித்திருக்கிறார்.

-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications