கனா காணும் காலங்கள் சீரியல் "ஜோ” செய்த செயல்.. மறக்க முடியாத சம்பவம்! உருக்கமாக பேசிய பிரதீப் ரங்கநாதன்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ஒரு தலைமுறையையே கவர்ந்த சீரியல்களில் முக்கியமானது கனா காணும் காலங்கள். பள்ளி வாழ்க்கை, நட்பு, காதல், கனவுகள்-இந்த எல்லாத்தையும் மிகவும் இயல்பாக காட்டிய அந்த சீரியல் இன்றைக்கும் பலரின் நினைவில் இருக்கிறது. குறிப்பாக 'ஜோ' என்ற கதாபாத்திரம், அந்த காலத்து இளைஞர்களுக்கு ஒரு விதமான கனவு ஹீரோவாகவே இருந்தது.
அந்த 'ஜோ'வை இப்போது மீண்டும் பேச வைக்க காரணமாக இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு அனுபவம், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, பிரதீப் ரங்கநாதன் தனது பள்ளி நாட்களையும், அந்த காலத்தில் தன்னை பாதித்த மனிதர்களையும் நினைவு கூர்ந்தார்.
"நான் ஸ்கூலில் படிக்கும்போது 'கனா காணும் காலங்கள்' ரொம்ப ஹிட். அந்த சீரியலில் 'ஜோ' கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். நாங்க எல்லாருக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் மாதிரி தான் இருந்தார்," என்று ஆரம்பித்தார். அதற்குப் பிறகு அவர் சொன்ன அனுபவம்தான் பலரையும் நெகிழ வைத்தது.
வாய்ப்பு கிடைக்காத ஏமாற்றம்
ஒரு நாள், எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்ற ஆசையுடன் பிரதீப் சென்றிருக்கிறார். ஒரு ரெஸ்டாரண்டில் சூர்யா அமர்ந்திருந்தாராம். அவரை பார்த்து காத்திருந்து, தைரியம் செய்து பேசினார்.
"சார், உங்களிடம் அசிஸ்டென்ட்டா சேரணும்" என்று கேட்டதற்கு, "ப்ரொஃபைல் கொடுத்து போங்க... பார்த்துட்டு சொல்லுறேன்" என்று சாதாரணமாக பதில் கிடைத்தது.
அந்த பதில் பெரிய மறுப்பு இல்லாதபோதும், பிரதீப்புக்கு அது ஒரு ஏமாற்றமாக இருந்தது. மனசு உடைந்து கீழே இறங்கி வந்திருக்கிறார். அப்படியே அந்த நேரத்தில் தான், 'ஜோ' கதாபாத்திரத்தில் நடித்த யுதன் அங்கே வந்திருக்கிறார்.
பெரிய மாற்றம்
அவர் என்ன பேசினார் என்பது இன்றைக்கும் பிரதீப்புக்கு சரியாக நினைவில் இல்லை. ஆனால் அந்த சில நிமிட உரையாடல் அவரை மீண்டும் எழுந்து நிற்க வைத்ததாம்.
"நான் உடைந்து இருந்த நேரத்தில் அவர் நல்லவிதமா பேசினார்... என்ன பேசினார்னு இப்போ நினைவுக்கு வரல... ஆனா அது எனக்கு ஒரு பெரிய பூஸ்ட் மாதிரி இருந்தது," என்று பிரதீப் உருக்கமாக பேசியிருக்கிறார் .
அந்த ஒரு தருணத்துக்குப் பிறகு தான் அவர் விடாமுயற்சியுடன் வேலை செய்ய ஆரம்பித்ததாகவும், இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன் என்றும் அவர் கூறினார்.
இன்று டாப் லெவலில் இருக்கும் பிரதீப்
இப்போது பிரதீப் ரங்கநாதன், இளம் தலைமுறையின் ஃபேவரிட் ஹீரோவாகவே மாறியிருக்கிறார். அவர் இயக்கி நடித்த படங்கள் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன. குறிப்பாக 'லவ் டுடே' படம் வெளியான பிறகு, 2K கிட்ஸ்களின் மனதில் அவர் ஒரு ஸ்பெஷல் இடம் பிடித்தார். இப்போது தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பிரதிப் தன்னை பற்றி பேசிய வீடியோக்களை ஷேர் செய்த யுதன் அதற்கு நன்றி சொல்லி இருக்கிறார். இப்போதும் என்னை எல்லோரும் நினைவில் வைத்திருப்பதற்கு ரொம்ப சந்தோஷம் என்றும் அவர் பேசியிருக்கிறார். ஆனால் யுதன் மீண்டும் நடிக்க வேண்டும் என்று பலரும் கமெண்ட்ஸ் கொடுத்து வருகின்றனர்.
"ஜோ" இப்போது எங்கே?
'கனா காணும் காலங்கள்' சீரியலில் நடித்த "ஜோ" கதாபாத்திர நடிகர் யுதன், அந்த சீரியலுக்குப் பிறகு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். அதிலும் காதல் சொல்ல வந்தேன் பட்டாளம் போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. ஆனால் தொடர்ந்து பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால், மெதுவாக திரையுலகில் இருந்து பின்வாங்கி விட்டார். இன்று பிரதீப் வளர்ந்ததை பார்த்து ரசிகர்கள் மகிழ்கிறார்கள்... அதே நேரத்தில், அந்த 'ஜோ' மீண்டும் திரையில் வரணும் என்ற எதிர்பார்ப்பும் அமைதியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
-
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
சுந்தர்.சி எம்எல்ஏ-வானால் மீனாட்சியம்மன் கோவில் அருகேயுள்ள இறைச்சி கடைகள் மூடல்? அவரே தந்த விளக்கம்! -
லோன் எடுத்து இருக்கீங்களா? வருகிறது செம சலுகை.. மத்திய அரசு போடும் முக்கிய திட்டம்.. யாருக்கு பயன்? -
கோவையில் தோட்டம்.. சென்னையில் பிளாட்.. வானதி சீனிவாசன் சொத்து பட்டியல் -
திமுகவுக்கு ‘குட்பை'.. விஜயின் முன்னாள் மேனேஜர் திடீர் விலகல்.. ஸ்டாலினுக்கு கடிதம்.. என்ன காரணம்? -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications